சர்ச்சைக்குரிய மத்திய அமைச்சர்கள் பவன் குமார் பன்சாலும் அஸ்வனிகுமாரும் ராஜினாமாசெய்தது தாமதமான நடவடிக்கை . அவர்களை போன்று பிரதமர் மன்மோகன் சிங்கும் பதவி விலகவேண்டும் என பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இது குறித்து மேலும் தெரிவித்ததாவது ; இது மிகவும் கால தாமதமான நடவடிக்கை. இந்த கோரிக்கையைத் தான் நாங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைத்தோம். ஆனால் அப்போது இதைபிரதமர் ஏற்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் மதிப்புமிக்க நேரம் வீணடிக்கப்பட்டு விட்டது. இத்தோடு பிரச்சனை முடிந்து விடவில்லை. சட்டஅமைச்சர் அஸ்வனி குமார், பிரதமரை காப்பாற்றுவதற்காக தான் சி.பி.ஐ., விசாரணை அறிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் பிரதமர் மன்மோகன் சிங்கும் கட்டாயம் ராஜினாமா செய்தாகவேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் பதவியில் நீடிப்பதற்கு நியாயம் ஏதும் இல்லை என்றார்.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.