கொலைசெய்யப்பட்ட இந்து முன்னணி மாநிலசெயலாளர் வெள்ளையப்பனும், பா.ஜ.க பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷும் செய்த தவறு தான் என்ன.. ஏன் இவர்களைக் கொலைசெய்தனர் என பாஜக தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்..
வேலூரில் நடந்த வெள்ளையப்பன் நினைவுஅஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வேலூரில் கடந்த 14 நாட்களுக்கு முன்பு இந்துமுன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் வெட்டி படுகொலைசெய்யப்பட்டார். இந்நிலையில் சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்டு உள்ளார்.
இவர்கள் செய்த தவறு என்ன? சொத்துபிரசினையா? அல்லது நிலத்தை அபகரித்தார்களா? தேசத்துக்காக உழைத்தகாரணத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்து மததலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். பாஜக எழுச்சியை தடுக்கவே இந்தகொலைகள் நடக்கிறது. நாளை தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்ததுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். ஏற்கனவே 100க்கும் அதிகமானவர்களை இழந்துள்ளோம். இதில் குற்றவாளிகளை கண்டுபிடிக்ககோரி ஜனநாயக முறையில் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்கள் நடத்தியுள்ளோம். இதுவரை எந்தவழக்கிலும் உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை.
அத்வானி மதுரைக்கு வந்தபோது பாலத்தில் நாட்டுவெடிகுண்டு வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்து தலைவர்கள் மீது 10 தாக்குதல்சம்பவம் நடந்துள்ளன. 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. தேசபக்தி உள்ள தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை. சேலத்தில் கொலைசெய்யப்பட்ட ரமேஷ் நேர்மையானவர். அவருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று தெரிந்தும் உரியபாதுகாப்பு அளிக்கப்படவில்லை. இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு பாதுகாப்புவழங்க கோரியும், நடந்த கொலைகளில் குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்யக் கோரியும் விரைவில் முதல்வரை சந்தித்து மனுஅளிக்க உள்ளோம் என்றார் அவர்.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.