எல்லை பாதுகாப்பைவிட உணவுபாதுகாப்பு மசோதா முக்கியமானதா?

 காஷ்மீர் எல்லையில் இந்தியவீரர்கள் 5பேரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு பாதுகாப்புஅமைச்சர் ஏகே.அந்தோணி அளித்த முரண்பட்ட அறிக்கைக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த அமளி ,கொந்தளிப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் , உணவுபாதுகாப்பு மசோதாவை இப்போது தாக்கல்செய்வது முக்கியமா? எனவும் மத்திய அரசுக்கு சுஷ்மா ஸ்வராஜ் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்தியதாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே. அந்தோணியும், ராணுவமும் முரண்பட்டதகவலை அறிக்கையாக வெளியிட்டனர். பின்னர் அதில் திருத்தம்செய்யப்பட்ட விவகாரம் எதிர்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று கடும்அமளியை ஏற்படுத்தியது. முரண்பட்டதகவலை வெளியிட்ட அந்தோணி இதுகுறித்து விளக்கம் தர வேண்டும் என்றும், அவர் பதவி விலகவேண்டும் என்றும் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பேசிய மக்களவை எதிர்கட்சி தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மாஸ்வராஜ், “எல்லை பாதுகாப்பைவிட உணவுபாதுகாப்பு மசோதா முக்கியமானதா?” என கேள்வி எழுப்பினார். மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி மாநிலங்களவையில் அளித்த விளக்கத்தினால் திருப்தி அடைய முடியாது என்றும், அவர் மக்களவைக்கும் வந்து தாம்அளித்த முரண்பாடான அறிக்கைக்காக மன்னிப்புகோர வேண்டும் என்றும் சுஷ்மா வலியுறுத்தினார். ஆனால் அந்தோணி அவைக்கு வராததை தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள்முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...