மக்கள் கூட்டத்தை சகிக்கமுடியாத கோழைகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்

மக்கள் கூட்டத்தை சகிக்கமுடியாத கோழைகள்  குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர் பிகார் மாநிலம் பாட்னாவில் நரேந்திரமோடி பேசிய பொதுக்கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க.,வினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே திங்கள் கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், தேசியச்செயலர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணைத் தலைவர் எச். ராஜா, மாநிலச்செயலாளர் வானதிசீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது.

காங்கிரஸ் ஆட்சியில் நாடுமுழுவதும் பயங்கரவாதம் வேரூன்றியுள்ளது. நரேந்திரமோடிக்கு திரளும் மக்கள் கூட்டத்தை சகிக்கமுடியாத கோழைகள் இதுபோன்ற குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

நரேந்திரமோடி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரதமர்வேட்பாளர். அவரது பேச்சு நாடு முழுவதும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் மோடியின்பிரசாரத்தை தடுக்க நினைக்கின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். தொடர்ந்து மக்கள்பணியைச் செய்வோம்.

பாட்னாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும், பிகார்மாநில அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

மக்களுக்கு உரியபாதுகாப்பு அளிக்க நிதீஷ்குமார் அரசு தவறிவிட்டது. பயங்கரவாதத்தை வேரறுக்க பா,ஜ,க தொடர்ந்து போராடும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...