ஐபி விடுத்த எச்சரிக்கையை நிதீஷ்குமார் அலட்சியப் படுத்தியுள்ளார்

 நரேந்திரமோடி தாக்கப்படலாம் என்று மத்திய உளவுத் துறையான ஐபி விடுத்த எச்சரிக்கையை பீகார் முதல்வர் நிதீஷ்குமார் வேண்டும் என்றே அலட்சியப் படுத்தியுள்ளார் என பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து பா.ஜ.க தலைவர் அருண்ஜேட்லி கூறுகையில், நரேந்திரமோடி தாக்கப்படலாம் என்று தங்களுக்கு உளவுத் துறையிடமிருந்து தகவல்வரவில்லை என்று நிதீஷ்குமார் கூறுகிறார். ஆனால் நரேந்திரமோடியின் கூட்டத்திற்கு சிலநாட்களுக்கு முன்பே இதுதொடர்பாக ஐ.பி எச்சரிக்கைவிடுத்து கடிதமும் அனுப்பியுள்ளது.

அந்த எச்சரிக்கையை, தீவிரவாதத்தாக்குதல் நடக்கலாம் என்ற எச்சரிக்கையை நிதீஷ்குமார் அரசு வேண்டும் என்றே அலட்சியப்படுத்தியுள்ளது. அக்டோபர் 1ம் தேதி பொதுவான எச்சரிக்கையையும், அக்டோபர் 23ம்தேதி இந்தியன் முஜாஹிதீன் குழுவினர் மோடியின் கூட்டத்தை சீர்குலைக்கலாம் என்று குறிப்பிட்டும் ஐபி எச்சரித்துள்ளது. ஆனால் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க பீகார் அரசும், காவல் துறையும் தவறியுள்ளன. வேண்டும் என்றே அவர்கள் அலட்சியம்காட்டியுள்ளனர். மிகவும் மெத்தனமாக நடந்துள்ளனர் என்றார் ஜேட்லி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...