பாஜக.,வும் ஆம் ஆத்மி கட்சியும் ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது

 70 தொகுதிகள்கொண்ட டெல்லி சட்ட சபைக்கு கடந்த 4-ம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் டெல்லியில் தொடர்ந்து மூன்றுமுறை ஆட்சிசெய்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெறும் 8 தொகுதிகளில் மட்டும்வென்று படுதோல்வி அடைந்தது.

பா.ஜ.க.,வுக்கு 32 தொகுதிகளும், முதல்முறையாக தேர்தல்களத்தை சந்தித்த ஆம் ஆத்மிகட்சிக்கு 28 இடங்களும் கிடைத்தன. இதையடுத்து யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால், அங்கு ஆட்சிஅமைப்பதில் குழப்பம் நிலவிவருகிறது.

இந்நிலையில், ஆம் ஆத்மிகட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாங்கள் எதிர்க்கட்சியாக அமர்கிறோம். இல்லையேல், மறு தேர்தலை சந்திக்கிறோம் என்று கூறிவருகிறார். பாஜக .,வும் எதிர்க்கட்சியாக உட்கார விரும்புவதாக கூறியுள்ளது.

இதுகுறித்து சமூகசேவகரும் முன்னாள் ஐபிஎஸ். அதிகாரியுமான கிரண்பேடி கூறியதாவது:-

தலைநகர் டெல்லியில் நல்லாட்சி கொடுக்கவேண்டிய பொறுப்பு பாஜக.,வுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இருக்கிறது. இருந்தும் அவர்களிடம் ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை இல்லை. டெல்லிக்கு நிலையான ஆட்சி அமையாத சூழ்நிலை உருவாகி மறுதேர்தலை சந்திப்போம் என்று அவர்கள் கூறுவது துரதிருஷ்டமே.

எனவே, இரு கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து டெல்லியில் ஒரு புதுமாதிரியான ஆட்சி அமைத்து இந்த சிக்கலான நிலைமைக்கு முடிவுகட்ட வேண்டும். பாஜக.,வும் ஆம் ஆத்மி கட்சியும் வாக்காளர்களை மதித்து ஒன்றிணையவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு கட்சிகளும் ஒருவருடன் ஒருவர் பேசவேண்டும். இருகட்சிகளும் ஒன்றிணைந்து நல்லாட்சி தரவே டெல்லிமக்கள் விரும்புகின்றனர். என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...