பாஜக.,வின் தேசியசெயற்குழு வருகிற ஜனவரி 17ல் கூடுகிறது

 மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வுசெய்வதற்காக பாஜக.,வின் தேசியசெயற்குழு வருகிற ஜனவரி 17ந்தேதி கூடுகிறது.
.

பாஜக மூத்த தலைவர்கள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அவர்கள் அடுத்தக்கட்ட பணிகளில் தீவிரம்காட்ட தொடங்கியுள்ளனர். கடந்த 3 நாட்களாக டெல்லியில் மாநில பாஜக தலைவர்களின் ஆலோசனைகூட்டம் நடந்தது. அதில் வாக்காளர்களை கவரும்வகையில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

அடுத்தக் கட்டமாக வரும் 24-ந்தேதி பாஜக.,வின் பிரசாரக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பாஜக.,வின் பிரசார வியூகத்துக்கு இறுதிவடிவம் தரப்பட உள்ளது.

காங்கிரஸ் அரசின் இமாலய ஊழல்களை மக்களிடம் தெரியப் படுத்தும் விதமாக எத்தகைய புதுமையான பிரசாரம்செய்யலாம் என்று அந்த கூட்டத்தில் வரையறுக்கப்படும். இது தவிர பாஜக மூத்த தலைவர்கள் எந்தெந்த நகரங்களில் சூறாவளிபிரசாரம் செய்யவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பபட உள்ளது.

இதையடுத்து அடுத்தமாதம் (ஜனவரி) 17-ந்தேதி பாஜக செயற்குழு கூடுகிறது. அடுத்தடுத்த நாட்களில் (18,19-ந் தேதிகளில்) பாஜக தேசியக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

அந்தகூட்டங்களில் பாஜக வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதற்காக எல்லாமாநில தலைவர்களிடமும் வேட்பாளர்கள் பெயர், அவர்களது தகுதி, திறமைபற்றிய விவரங்களை உரிய பரிந்துரையுடன் தருமாறு பாஜக தேசியதலைவர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜக தேசியகுழுவில் வேட்பாளர்கள் தேர்வு ஆய்வுசெய்யப்படும். அதன் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல்பட்டியல் வெளியிடப்படும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...