காங்கிரஸ் வருடம் 365 நாட்களையும் ‘ஏப்ரல் ஃபூல்’ தினமாக கொண்டாடுகிறது என்று நரேந்திர மோடி சாடியுள்ளார்.
உத்திரப் பிரதேசம் மாநிலம் பரேலியில், நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசியதாவது: “பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதுபோல, காங்கிரஸ் தேர்தல்நேரத்தில் ‘ஏழை’, ‘ஏழை’, ‘ஏழை’ என்ற மந்திரத்தை பாடுகிறது. ஆனால், ஏழைமக்கள் உணர்ந்து விட்டனர். காங்கிரஸ் 365 நாளும் முட்டாள்கள் தினத்தை கொண்டாடுகிறது என்று அவர்களுக்குதெரியும்.
ராகுல் ஏழைகளின் மீது அக்கறை உள்ளதுபோல பாவனை செய்துவருவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். செல்வந்தராக பிறந்த ராகுலுக்கு ஏழைஎன்றால் தெரியுமா அல்லது வறுமை என்றால் புரியுமா?
ஐ.மு.,கூட்டணி ஆட்சியின் போது நாட்டில் ராணுவவீரர்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் புறக்கணிக்கப்பட்டனர். விவசாயிகள் தற்கொலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். ஏழைமக்களுக்கு சென்றடைய வேண்டிய தானியங்களை கிடங்குகளில் அடைத்துவைத்து பாழாக்கச்செய்தது காங்கிரஸ் அரசு. உச்சநீதிமன்றம் அந்த தானியங்களை ஏழைகளுக்கு விநியோகிக்கும்படி கேட்டப்போது காங்கிரஸ் அரசு அதனை செய்யவில்லை.
காங்கிரஸ்கட்சி 2009 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியது. ஆனால், அவர்கள் அதனை செய்யவில்லை. ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது விவசாயிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது” என்றார் மோடி.
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.