மனிதனை மதம் மாற்றிவிடலாம் , DNA.,வை?

 உண்மை இஸ்லாமியருக்கு புதிய இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது, சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்து விட்டால் உண்மை இஸ்லாமியராக ஆகிவிடலாமா.

1992 ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் 250 க்கும் அதிகமான பொதுமக்களை கொன்று குவித்த தீவிரவாதிகளை வேறு நாடுகளுக்கு தப்பிச்செல்ல வழிவகுத்து கொடுத்தாக குற்றம்சாட்டப்பட்ட! , ஒரு பெண் திருமணம் ஆகியோ ஆகமலோ, ஒரு ஆணுடன் சம்மதத்துடனோ சம்மதம் இல்லமலோ உறவு கொண்டால் அந்த ஆணுடன் சேர்த்து அந்த பெண்ணையும் தூக்கிலிட வேண்டும் என்று ஏற்கனவே புதிய தத்துவார்த்த கருத்துக்களை வெளியிட்டிருந்த!!, மகராஷ்டிர மாநில சமாஜ்வாடி கட்சி தலைவர் அபு ஆஸ்மி இப்போது மற்றும் ஒரு புதிய தத்துவார்த்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதாவது சமாஜ்வாடி கட்சிக்கு ஓட்டளிக்காத முஸ்லீம்களும், அக்கட்சிக்கு எதிராக பேசும் முஸ்லீம்களும் உண்மையான முஸ்லீம்கள் இல்லை. அவர்களுடைய டி.என்.ஏ.வை சோதனை செய்ய வேண்டும். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவராக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை கொள்ளுதல் , தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் உள்ளிட்டவைகளே உண்மை இஸ்லாமியருக்கு அடையாளமாக இருந்தது, இப்போது கூடுதலாக சமாஜ்வாதிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற அம்சத்தையும் இதனுடன் புதிதாக சேர்க்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளார்கள். இஸ்லாமியர் இவர்களுக்கு விசுவாசமாக இருந்ததால்தான் மூன்று முறை (1993-1995, 2003-2007, 2012) இவர்களால் உத்திர பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க முடிந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் இவர்கள் மேல் கொண்ட விசுவாசம் வீண் என்று உணர்ந்ததால் தான் இவர்கள் ஆட்சியை துறக்கவும் நேர்ந்தது.

உத்திர பிரதேசத்தில் 18.5% இஸ்லாமிய வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளி ருசிகண்டுவிட்ட இவர்கள் இப்போது இதே முறையை பின்பற்றி அகில இந்திய அளவில் ஆட்சி அதிகாரத்தில் அமர துடிக்கிறார்கள். எனவேதான் இந்தியாவின் அறிவிக்கப்படாத இஸ்லாமிய போப்பாக நடந்து கொள்கிறார்கள், உண்மை இஸ்லாமுக்கு புதிய இலக்கணத்தையும் வகுத்து இருக்கிறார்கள். டி.என்.எ(D.N.A) சோதனை நடத்த வேண்டும் என்று பரிந்துரையும் செய்துள்ளார்கள்.

உண்மையில் டி.என்.எ(D.N.A) சோதனை நடத்தினால் அனைத்து இஸ்லாமியர்களையும் இந்துக்களாகத் தான் காட்டும், இங்கே உள்ள இஸ்லாமியர் அனைவரும் அரேபியாவில் இருந்து வந்தவர்கள் அல்ல. பெரும்பாலனவர்கள் கத்தி முனையிலும், ஏமாற்றப்பட்டும், இஸ்லாமியர் அல்லாதோர் மீதான புதிய வரிகளாலும் , நிதிச் சுமையினாலும், வறுமையினாலும் மாறியவர்களே. இவர்களுக்கு பாட்டனுக்கு பாட்டன் , முப்பாட்டன் அனைவரும் இந்துக்களே. மனிதனை வேண்டுமானால் மதம் மாற்றிவிடலாம் டி.என்.எ(D.N.A) வை எல்லாம் மதம் மாற்ற முடியாது , அந்த விதத்தில் அபு ஆஸ்மியே உண்மை இஸ்லாமியனன்று.

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...