முண்டேவின் வாரிசுகள் தேர்தலில் போட்டி யிட்டால் அவர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம்

 சாலைவிபத்தில் உயிரிழந்த பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் வாரிசுகள் தேர்தலில் போட்டி யிட்டால் அவர்களுக்கு எதிராக தேசியவாத காங்கிரசின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் பீட் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நரேந்திரமோடி மந்திரி சபையில் ஊரக வளர்ச்சிதுறை மந்திரியாக பதவி ஏற்ற கோபிநாத் முண்டே டெல்லியில் நடந்த கார்விபத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு மும்பையில் அனைத்துகட்சிகள் சார்பில் இரங்கல்கூட்டம் நடந்தது. இதில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இரானி, இந்திய குடியரசுகட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே, கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜா எம்எல்ஏ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசுகையில், கோபிநாத் முண்டே இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அந்த இடத்தில் அவரதுமகள் பங்கஜா இருக்கிறார். தந்தையின் வெற்றிடத்தை மகள் பங்கஜா நிச்சயம் நிரப்புவார் என்றார்.

சரத் பவார் பேசுகையில், கோபிநாத் முண்டேயின் துயர் மரணத்தால் பீட்தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த இடைத்தேர்தலில் கோபிநாத் முண்டேயின் குடும்ப உறுப்பினர் யாராவது போட்டியிட்டால், அவரை எதிர்த்து எங்களது கட்சி வேட்பாளரை நிறுத்தாது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...