ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சம்

 பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மோடி அரசின் 2014-2015 முதல் ரயில்வே பட்ஜெட்டை ரயில்வேதுறை அமைச்சர் சதானந்தா கவுடா தாக்கல் செய்தார் . இந்திய ரயில்வே சந்திக்கும் சவால்களுக்கு தீர்வு உள்ளது , 12 ஆயிரத்து 500 ரயில்களை இந்திய ரயில்வே இயக்கிவருகிறது. மேலும் நாள்

ஒன்றுக்கு 2 கோடியே 30 லட்சம் பயணிகள் ரயிலை பயன் படுத்துகின்றனர். நாள் ஒன்றுக்கு 30 லட்சம் சரக்குகளை கையாண்டு வருகிறது. சென்ற ஆண்டு இந்திய ரயில்வேயின் வருவாய் 1 லட்சத்து 39 ஆயிரம்கோடி , சென்ற ஆண்டு ரயில்வேயின் நடைமுறை செலவு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி . 6 சதவீத உபரியை கொண்டு ரயில்வே வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்று ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா மக்களவையில் உரையாற்றினார்.

மேலும் மத்திய ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சம் ;

* புதிய திட்டங்கள் அறிவிப்பதை விட அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதே சாலச்சிறந்தது.

* என் மீது நம்பிக்கை வைத்து பெரிய பொறுப்பைக் கொடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த நேரத்தில் நான் நன்றி செலுத்துகிறேன்.

* இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நான் நன்றாக நிறைவேற்றுவேன்.

* இந்தியப் பொருளாதாரத்தின் ஆன்மாவாகத் திகழ்வது, இந்திய ரயில்வேதான்.

* புதிய ரயில்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகளால் நான் உண்மையில் திணறிப் போயுள்ளேன்.

* உலகின் மிகப் பெரிய சரக்குப் போக்குவரத்தாக இந்திய ரயில்வேயை மாற்றுவது நமது குறிக்கோளாக இருக்கும்.

* சமூக மற்றும் பொருளாதார வேண்டுகோள்களை சமன் செய்யும் விதமாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

* இப்போதும் 30 வருடங்களைக் கடந்தும் முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டிருக்கும் 4 முக்கிய திட்டங்கள் இருக்கின்றன.

* அந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்தான் கவனம் செலுத்தப்பட்டுள்ளதே தவிர அவற்றை முடித்துவிட முயற்சி எடுக்கப்படவில்லை.

* ரயில்வேத் துறையை பராமரிப்பதற்கும் சரியாகக் கையாள்வதற்குமே வருவாயில் 96% செலவு செய்யப்பட்டுவிடுகிறது. இதில் மீதமுள்ள 6% மட்டுமே மீதமுள்ளது.

* எனவே, இதற்கான மருந்தாக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் துவக்கத்தில் கசப்பானவையாகத்தான் இருக்கும், ஆனால் முடிவு அமிர்தமாக இருக்கும்.

* ரயில்வேயின் நிலையை மேலும் உயர்த்துவதற்கு, தனியார் மற்றும் பொதுமக்கள் கூட்டுப் பங்களிப்பு தேவை.

* ரயில்வேத் துறை அமைச்சகம், ரயில்வேத் துறையில் நேரடி அன்னிய முதலீட்டுக்கான மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை எதிர்பாக்கிறது. இது ரயில்வே போக்குவரத்து தவிர்த்த மற்ற துறைகளில்!

* அடுத்த பத்து வருடங்களுக்குத் தேவையானவற்றை சரிக்கட்ட ஒவ்வொரு வருடமும் ரூ.50 ஆயிரம் கோடி ரயில்வேக்கு தேவைப்படுகிறது.

* உபரி வருவாய் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. இது வளர்ச்சித் திட்டங்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது

* கடந்த 2013-14ம் நிதியாண்டில், மொத்த போக்குவரத்து வருவாய் ரூ.12,35,558 கோடியாக இருந்தது, 94% என்ற விகிதத்தில் இருந்தது.

* தற்போது உபரி வருவாய் குறைந்துவிட்டதால், வரும் ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி ரயில்வேயின் நிலுவைத்திட்டங்கள், தொடர்ந்து வரும் திட்டங்களுக்குத் தேவைப்படுகிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கான மூலவருவாய் கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளது.

* மூத்த குடிமக்களுக்கு வசதியாக, ரயில் நிலையங்களில் உள்ளே செல்வதற்கு பேட்டரி கார்கள் வசதி வழங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

* பிரபல பிராண்டுகளின் முன் தயாரிப்பு உணவு வகைகள், தயார் நிலை உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் என் யோசனையை முன்வைக்கிறேன்.

* 50 ரயில் நிலையங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், அதற்கான பணிகளை மேம்படுத்தவும் தனியார் துறை பங்களிப்பை அவுட்சோர்ஸிங் முறையில் வழங்க என் விருப்பத்தை முன்வைக்கிறேன்.

* * ரயில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி வழங்கப்படும்.

* ரயில் நிலையங்களில் உள்ள தூய்மைப் படுத்தும் பணிகளைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்/

* ரயில்களில் தரமற்ற உணவுகளை வழங்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கான ஒப்பந்தங்கள் முறிக்கப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* தபால் நிலையங்கள் மற்றும் மொபைல் போன்கள் மூலமான ரயில்வே டிக்கெட் புக்கிங், பிரபலப்படுத்தப் படும்.

* டிக்கெட் வழங்கும் மெஷின்கள் மூலம் நாணயங்களை இட்டு டிக்கெட் பெறும் தானியங்கி முறை பிரபலப்படுத்தப் படும்.

* பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், 4000 பெண் போலீஸார் ஆர்பிஎஃப் ரயில்வே போலீஸ் பிரிவில் சேர்க்கப்படுவர்.

* மும்பை – ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்க திட்டம் முன்வைக்கப்படுகிறது.

* தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் ரயில்களின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டரில் இருந்து 200 கி.மீட்டர் வரையில் அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

* அனைத்து ரயில் நிலையங்களிலும் ஓய்வு அறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளை நீக்க, ரூ.1,780 கோடி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* அனைத்து ஏ1 ரயில் நிலையங்களிலும் வைபி தொழில்நுட்பம் மூலம் இணைய இணைப்பு வழங்கப்படும்

* தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் 29 ரயில் திட்டங்கள் உள்ளன. அவை ரூ.20,680 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

* ரயில்வேத் துறையில் பொறியியல் துறை பின்னணியில் வரும் இளம் புல மாணவர்களுக்கு கோடைகாலப் பயிற்சி வழங்கப்படும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.