கோயில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்படவேண்டும்

 திருக்கோயில் குளம்சார்ந்த நிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவதை தடுத்து, கோயில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்படவேண்டும் என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் வலியுறுத்தியுள்ளார்

திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் இந்து முன்னணி சார்பில் சாதித்தலைவர்கள் அல்ல, சாதித்த தலைவர்கள் என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமுதாயத் தலைவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில், அவர் பேசியது: இந்துமதம் பல்வேறு பிரச்னைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்துவருகிறது. அவற்றிலிருந்து இந்துமதத்தை மீட்டெடுத்து வளர்த்தெடுக்க வேண்டிய கடமை அனைத்து சமுதாயத் தலைவர்களுக்கும் உண்டு. உயர்ந்தசாதி, தாழ்ந்தசாதி என்ற வேறுபாடு காரணமாக பிரிந்து செயல்படாமல் நாம் அனைவரும் இந்துமதத்தவர் என்ற அடிப்படையில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

மத மாற்றத்தை அங்கீகரிக்க கூடாது. மதமாற்றங்கள் அதிகரித்தால் இந்துக்கள் சிறுபான்மை இனத்தவராகும் நிலை உருவாகும். நாட்டின் சுதந்திரம், இந்துக்களின் தன்னாட்சிக்கு ஆபத்து ஏற்படும். வருங்கால தலை முறையினருக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பசு, கன்றுகளை கேரளத்துக்கு இறைச்சிக்காக விற்பனை செய்வதை தடைசெய்ய வேண்டும். பசுக்களின் இறைச்சியை ஏற்றுமதி செய்வதையும் தடைசெய்ய வேண்டும். பெரும்பாலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளன. திருக்கோயில் குளம்சார்ந்த இடங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்படுகின்றன. எனவே, கோயில் நிலங்கள் மற்றும் அதன் குளம்சார்ந்த இடங்களை கண்டறிந்து அவற்றை மீட்டெடுக்கவேண்டும். அனைத்து கோயில்களிலும் 6 கால பூஜையுடன், அன்னதானத் திட்டத்தையும் உறுதி செய்யவேண்டும். ஆண்டுக்கொரு முறை சமர்ப்பண தினம் கொண்டாடப்படுவதன் மூலம் என் நாடு, என்மதம், என் தாய் என்ற விழிப்புணர்வை அனைத்து சமுதாயத்தினரிடமும் கொண்டுசேர்க்க வேண்டும். கோயில்களே நீதிமன்றங்களாகவும், மருத்துவ சாலைகளாகவும் மாறவேண்டும் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...