பெண்களுக்கு அதிகாரம் தரும் வகையில், அவர்களுக்கான பிரத்யேகவங்கி, நாடுமுழுவதும் துவங்கப்படும். இந்தவங்கி, கடந்தாண்டு துவங்கப்பட்ட, ‘பாரதிய மகிளா வங்கி’யுடன் இணைந்து செயல்படும்,” என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.
இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது: பெண்களுக்கு சுய அதிகாரம் தரும் வகையிலும், அவர்களுக்கான நிதி தேவைகளுக்கு உதவும் வகையிலும், பெண்களுக்கென பிரத்யேக வங்கிசேவை துவங்கப்படவுள்ளது. நாடுமுழுவதும் இதன்கிளைகள் அமைக்கப்படும். 1993ல், துவங்கப்பட்ட, ‘ராஷ்டிரிய மகிளாகோஷ்’ கடந்தாண்டு துவங்கப்பட்ட, ‘பாரதிய மகிளாவங்கி’ ஆகியவற்றுடன், இந்தவங்கி இணைந்து செயல்படும். பெண்களுக்கான வங்கி சேவையை, ஒரேகூரையின் கீழ் கொண்டுவரும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தவங்கிகள் அனைத்தும், ‘பெண்கள் வங்கி’ என, அழைக்கப்படும்.இதுதொடர்பாக, முக்கிய வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் விரைவில் பேச்சு நடத்தப்படும். என்று அவர் கூறினார்.
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.