சீன எல்லைப் பகுதிகளில் சாலை மற்றும் கட்டமைப் புகளை வலுப்படுத்து வதற்காக, சுற்றுச் சூழல் விதிகளை தளர்த்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இது குறித்து டில்லியில் நிருபர்களிடம் பேசிய மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் , இந்திய எல்லைப் பகுதி வரை சீனா சாலைகள் மட்டுமல்லாது ரயில் பாதைகளையும் அமைத்துள்ளது. இதன் மூலம் சீனராணுவம் எல்லை வரை எளிதில் சென்றுவர முடியும். தற்போது மத்திய அரசு நமது படைகள் எல்லையை விரைவில் சென்றடையும் வகையில், கட்டமைப்பு வசதிகள் மற்றும் சாலைவசதிகளை மேம்படுத்த முடிவுசெய்துள்ளது. இதன் ஒருபகுதியாக சுற்றுச் சூழல் விதிகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.