தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அசாதாரணமான சூழல் நிலவிய போதும் நாங்கள் மாற்றுசக்தியாக உருவெடுத்துள்ளோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்..
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக நம்பிக்கையோடு போட்டியிட்டது. இந்த தேர்தலில் நாங்கள் 2 அதிகார மையங்களை எதிர்த்துபோட்டியிட வேண்டியிருந்தது. ஒன்று ஆளுங் கட்சியினரின் அத்து மீறல், மற்றொன்று மாநிலதேர்தல் ஆணையத்தின் அலட்சியப்போக்கு. வேட்பு மனு தொடங்கிய நாள்முதலே எங்களது வேட்பாளர்கள் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகினர் . இடைத் தேர்தலில் மிகப்பெரிய அசாதாரணமான சூழலை நாங்கள் சந்தித்தோம்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக அமைச்சர்கள், எல்லா இடத்திலும் பாஜக.,வை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என்று கூறினர். ஆனால், நாங்கள் எல்லா இடத்திலும் டெபாசிட் பெற்றுள்ளோம். கோவை, ராமநாத புரத்தில் அதிக வாக்குகளை வாங்கியுள்ளோம். நாங்கள்பெற்றது சுத்தமான வாக்குகள். ஆனால் வெற்றி பெற்றிருப் பவர்களின் வாக்குகளோ கள்ளவாக்குகள். பணபலத்துக்கும் மன பலத்துக்கும் நடந்த இந்த தேர்தலில் நாங்கள் தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்று விட்டோம். மிரட்டல்களுக்கு பயப்படாமல் களப்பணி ஆற்றிய பாஜக.,வினருக்கும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த தேர்தலின் மூலம் தமிழகத்தில் பாஜக மாற்றுசக்தியாக உருவெடுத்திருப்பது உறுதியாகியுள்ளது என்று தமிழிசை கூறினார்.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.