நாங்கள் மாற்றுசக்தியாக உருவெடுத்துள்ளோம்

 தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அசாதாரணமான சூழல் நிலவிய போதும் நாங்கள் மாற்றுசக்தியாக உருவெடுத்துள்ளோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்..

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக நம்பிக்கையோடு போட்டியிட்டது. இந்த தேர்தலில் நாங்கள் 2 அதிகார மையங்களை எதிர்த்துபோட்டியிட வேண்டியிருந்தது. ஒன்று ஆளுங் கட்சியினரின் அத்து மீறல், மற்றொன்று மாநிலதேர்தல் ஆணையத்தின் அலட்சியப்போக்கு. வேட்பு மனு தொடங்கிய நாள்முதலே எங்களது வேட்பாளர்கள் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகினர் . இடைத் தேர்தலில் மிகப்பெரிய அசாதாரணமான சூழலை நாங்கள் சந்தித்தோம்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக அமைச்சர்கள், எல்லா இடத்திலும் பாஜக.,வை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என்று கூறினர். ஆனால், நாங்கள் எல்லா இடத்திலும் டெபாசிட் பெற்றுள்ளோம். கோவை, ராமநாத புரத்தில் அதிக வாக்குகளை வாங்கியுள்ளோம். நாங்கள்பெற்றது சுத்தமான வாக்குகள். ஆனால் வெற்றி பெற்றிருப் பவர்களின் வாக்குகளோ கள்ளவாக்குகள். பணபலத்துக்கும் மன பலத்துக்கும் நடந்த இந்த தேர்தலில் நாங்கள் தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்று விட்டோம். மிரட்டல்களுக்கு பயப்படாமல் களப்பணி ஆற்றிய பாஜக.,வினருக்கும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த தேர்தலின் மூலம் தமிழகத்தில் பாஜக மாற்றுசக்தியாக உருவெடுத்திருப்பது உறுதியாகியுள்ளது என்று தமிழிசை கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...