நாங்கள் மாற்றுசக்தியாக உருவெடுத்துள்ளோம்

 தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அசாதாரணமான சூழல் நிலவிய போதும் நாங்கள் மாற்றுசக்தியாக உருவெடுத்துள்ளோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்..

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக நம்பிக்கையோடு போட்டியிட்டது. இந்த தேர்தலில் நாங்கள் 2 அதிகார மையங்களை எதிர்த்துபோட்டியிட வேண்டியிருந்தது. ஒன்று ஆளுங் கட்சியினரின் அத்து மீறல், மற்றொன்று மாநிலதேர்தல் ஆணையத்தின் அலட்சியப்போக்கு. வேட்பு மனு தொடங்கிய நாள்முதலே எங்களது வேட்பாளர்கள் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகினர் . இடைத் தேர்தலில் மிகப்பெரிய அசாதாரணமான சூழலை நாங்கள் சந்தித்தோம்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக அமைச்சர்கள், எல்லா இடத்திலும் பாஜக.,வை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என்று கூறினர். ஆனால், நாங்கள் எல்லா இடத்திலும் டெபாசிட் பெற்றுள்ளோம். கோவை, ராமநாத புரத்தில் அதிக வாக்குகளை வாங்கியுள்ளோம். நாங்கள்பெற்றது சுத்தமான வாக்குகள். ஆனால் வெற்றி பெற்றிருப் பவர்களின் வாக்குகளோ கள்ளவாக்குகள். பணபலத்துக்கும் மன பலத்துக்கும் நடந்த இந்த தேர்தலில் நாங்கள் தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்று விட்டோம். மிரட்டல்களுக்கு பயப்படாமல் களப்பணி ஆற்றிய பாஜக.,வினருக்கும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த தேர்தலின் மூலம் தமிழகத்தில் பாஜக மாற்றுசக்தியாக உருவெடுத்திருப்பது உறுதியாகியுள்ளது என்று தமிழிசை கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...