ஏழு மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடிமுதலீடு

 நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், ஏழு மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடிமுதலீடு குவிந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

டில்லியில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: தயாரிப்பு துறையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள்தேவை. நாட்டில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் , 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தபட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில், 'சிவப்புநாடா' முறையை ஒழித்து, தற்போதைய முரண்பாடான விதிகளில் சீர்திருத்தம்செய்து, தகவல் தொழில்நுட்ப வசதியை பரவலாக்க, அரசு முனைந்துள்ளது. இதன்மூலம் நிர்வாக நடைமுறை, ஆக்கப் பூர்வமாகவும், சுலபமானதாகவும் ஆகியுள்ளது.

வலிமையான தயாரிப்பு துறையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து செல்லவும், ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் எண்ணங்களை ஈடேறச்செய்ய முடியும். மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகள் மூலம், நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்தி, முதலீட்டாளர் களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில், ஏப்., – அக்., வரையிலான ஏழுமாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 25 சதவீதம் அதிகரித்து, 1.04 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதேகாலத்தில், 82,920 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...