ஏழு மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடிமுதலீடு

 நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், ஏழு மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடிமுதலீடு குவிந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

டில்லியில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: தயாரிப்பு துறையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள்தேவை. நாட்டில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் , 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தபட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில், 'சிவப்புநாடா' முறையை ஒழித்து, தற்போதைய முரண்பாடான விதிகளில் சீர்திருத்தம்செய்து, தகவல் தொழில்நுட்ப வசதியை பரவலாக்க, அரசு முனைந்துள்ளது. இதன்மூலம் நிர்வாக நடைமுறை, ஆக்கப் பூர்வமாகவும், சுலபமானதாகவும் ஆகியுள்ளது.

வலிமையான தயாரிப்பு துறையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து செல்லவும், ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் எண்ணங்களை ஈடேறச்செய்ய முடியும். மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகள் மூலம், நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்தி, முதலீட்டாளர் களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில், ஏப்., – அக்., வரையிலான ஏழுமாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 25 சதவீதம் அதிகரித்து, 1.04 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதேகாலத்தில், 82,920 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...