விவாதம், தொடர்பு ஆகிய இருத் தடங்களில்தான் ஜனநாயகம் பயணிக்கிறது

 தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் சொந்த ஊரில் நேற்று நடந்த விழாக்களில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சரத் பவாருக்கு புகழாரம் சூட்டினார். சரத்பவாரின் சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் பராமதியில், அவரது குடும்பத்தினர் நடத்தும் வித்யா பிரதிஷ்டான் கல்விநிலைய வளாகத்தில் சரத் பவாரின் மூத்த சகோதரரான மறைந்த அப்பா சாகேப் பவார் பெயரில் கட்டப்பட்டிருக்கும் ஆடிட்டோரியம் திறப்புவிழா நேற்று நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ஆடிட்டோரியத்தை திறந்துவைத்தார். இதைத்தொடர்ந்து இங்குள்ள வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகள் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்தவிழாவிலும் பிரதமர் நரேந்திர மோடி, சரத்பவார் ஆகியோர் கூட்டாக கலந்துகொண்டனர். இந்த பேரணியில் பேசுகையில், சரத் பவாரை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது; நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, மத்திய அரசில் இருந்தவர்களிடம் இருந்து வந்தபிரச்னைகள் உட்பட பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த சமயங்களில் நான் சரத்பவாரை தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டிருக்கிறேன். அவரும் அரசியல் பாகுபாடு இன்றி எனக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி பிரச்னைகளில் இருந்து விடுபட எனக்கு உதவி யிருக்கிறார். சரத்பவார் போன்ற தலைவர்களின் அனுபவங்களில் இருந்து நாம் பலநல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். இன்று ஊடகங்களுக்கு ஒரு விசேஷ நாளாக இருக்கும்.

தேர்தல் பிரசாரத்தின் போது நான் பேசியதையும் இப்போது நான் பேசுவதையும் நிச்சயம் அவர்கள் ஒப்பிட்டு செய்தி வெளியிடுவார்கள். இது தான் நமது நாட்டு ஜனநாயகத்தின் அழகியல். விவாதம், தொடர்பு ஆகிய இருத் தடங்களில்தான் ஜனநாயகம் பயணிக்கிறது. இரண்டு தலைவர்கள் சந்திப்பது ஒரு மிகப் பெரிய செய்தியாகிவிடுகிறது. தலை வர்களிடையேயான தொடர்புகள் எப்போதும் நின்று விடுவதில்லை. இந்த விஷயத்தில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு பொறுப்பு அதிகம் உண்டு. நாங்கள் இருவரும் வெவ்வேறு கட்சியிலிருக்கலாம், எங்களது அரசியல் எண்ணங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், நாட்டின் நலன் என்பது தான் எங்களது பொதுவான குறிக்கோள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சரத் பவார் பேசுகையில், நாங்கள் இருவரும் இந்த ஒரே மேடையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு அரசியல் வர்ணம் பூசவேண்டாம். வளர் ச்சியின் அடிப்படையில் தான் எங்களது செயல்பாடு அமைந்திருக்கும். அரசியலில் நாங்கள் இரண்டு நாட்கள் மோதிக் கொள்வோம். எஞ்சிய 363 நாட்களும் நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் பணியாற்றுகிறோம். நாட்டின்வளர்ச்சி சம்பந்தப்பட்ட எந்த நடவடிக்கை எடுத்தாலும் மத்திய அரசுக்கு நாங்கள் துணையாக இருப்போம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...