இந்தியா-சீனா உறவு வகுத்த பாதையில் சரியாக செல்கிறது

 எனது சீன பயணத்தால், உறுதியான பலன்கள் கிடைக்கும்; இந்தியா- சீனா இருநாடுகளுக்கு இடையேயான உறவு, புதியநிலையை எட்டும்' என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா எல்லை பிரச்னை தொடர்பான 18வது சுற்று பேச்சு வார்த்தை, தில்லியில் திங்கள் கிழமை நடைபெற்றது. இதையடுத்து, மோடியை யாங்ஜிச்சி சந்தித்துப் பேசினார். அப்போது, சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இந்திய பயணத்தை நினைவு கூர்ந்தார்.

இதைத்தொடர்ந்து, யாங் ஜிச்சியிடம் பிரதமர் தெரிவித்ததாக சீன அரசு செய்திநிறுவனமான "ஜின்ஹுவா' வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா-சீனா இடையேயான உறவானது, இருநாட்டு தலைவர்கள் வகுத்த பாதையில் அதிவேகத்துடன் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. எனது சீன பயணத்தின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, ஆழமான கருத்துகளை அந்நாட்டு தலைவர்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

இந்தியா-சீனா இடையே வளர்ந்துவரும் நட்புறவு, இரு நாடுகளுக்கும் பலனளிப்பது மட்டுமன்றி, ஆசியாவிலும், உலகளவிலும் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மோடி தெரிவித்தார் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...