மதுரை–ராமநாதபுரம் இடையே ரூ.1,400 கோடி செலவில் நான்குவழிச்சாலை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ் சாலை எண் 49–ல், மதுரை–ராமநாதபுரம் இடையே 115 கி.மீ. தூரத்துக்கு நான்கு வழிச் சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம், ரூ.1,400 கோடி செலவில் நிறைவேற்றப்படும். தொடங்கியதில் இருந்து, இரண்டரை ஆண்டுகளுக்குள் இத்திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும்.
இந்த திட்ட நிறைவேற்றம் மூலம், தமிழர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுகிறது. முக்கிய வர்த்தக மையமாக திகழும் மதுரையை, தென் கிழக்கு திசையின் இறுதிமுனையில் அமைந்துள்ள ராமநாதபுரத்துடன் இணைக்க இத்திட்டம் வகைசெய்கிறது.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.