அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

 ஆந்திராவில் அப்பாவி தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழிசை சவுந்தர ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில், உறுப்பினர்சேர்க்கை மற்றும் 2016 தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டதலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தின் போது, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆந்திர வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேருக்கும் மிகுந்த மனவருத்தத்துடன் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தசம்பவம் வன்மையாக கண்டிக்கத் தக்கது.

மரம் கடத்தலுக்கு பின்னால் இருப்பவர்கள் தப்பிக்கும் வகையில், திசை திருப்புவதற்காகவே இது போன்ற சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இந்தசம்பவத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது, ஆந்திர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக அரசு எச்சரிக்கையாக இருந்து, தொழிலாளர்கள் எல்லை தாண்டு வதை கண்காணித்திருக்க வேண்டும். இந்த செயல் பாடுகளை பார்க்கும்போது, தமிழக அரசு கண்காணிக்க தவறிவிட்டது என்று தோன்றுகிறது.

என்ன காரணத்துக்காக சுட்டு கொல்லப்பட்டார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், யாரும் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்திருக்க கூடாது. காட்டுக்குள் குருவிகளை சுட்டுக் கொல்வது போன்று தொழிலாளர்களை சுட்டுக்கொன்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 15 லட்சம் நிதி உதவி வழங்கவேண்டும்.

உண்மையில் நடந்தது என்ன என்பதை அரசியல் தலையீடு இன்றி, இருமாநிலங்களின் நட்புறவில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இரு முதல்–அமைச்சர்களும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பாஜக.வின் தேசிய ஆலோசனை கூட்டத்தில் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கும்வகையில், ஆழ்கடல் மீன்பிடி திட்டம் குறித்து வருகிற 28–ந்தேதி டெல்லியில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டம் முடிந்த பின் 29–ந் தேதி முழுமையான தகவல் அறிக்கை சுஷ்மா சுவராஜியிடம் தெரிவிக்கப்படும். தூக்குகயிற்றின் அருகில் சென்றவர்களை காப்பாற்றி கொண்டு வந்தது, மோடியின் அரசு. எனவே தமிழக மீனவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து மாநிலநிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று(நேற்று) நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஒருமாத காலம் சுற்றப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். பொதுக் கூட்டங்கள், பிரசார இயக்கங்கள் நடத்தப்பட உள்ளன.

எந்தெந்த தொகுதிகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கு தகுந்தார்போல், பிரசார உத்திகளை மேற்கொள்வது மற்றும் 2016 தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...