விவசாயி தற்கொலை கெஜ்ரிவால் வீட்டின்முன் ஆர்பாட்டம்

 டெல்லி பொதுக் கூட்டத்தில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.

.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கை டெல்லி துணை கவர்னர் நஜிப்ஜுங், போலீஸ் கமிஷனர் பி.எஸ். பசி ஆகியோர் சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். மக்களவையில் இது குறித்து விவாதிக்க கோரி கடும் அமளி ஏற்பட்டதால் சபை 30 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் தரப்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று மதியம் ஆம் ஆத்மி கட்சியின் பொதுகூட்டம் நடந்த போது ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கஜேந்திரன் மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் நடந்த போதிலும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்து உரையாறினார். பொதுக் கூட்டம் உடனடியாக ரத்து செய்யப்படாதற்கு கடும்கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின்முன், பிஜேபிசார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது கெஜ்ரிவாலின் உருவப்படங்கள் எரிக்கப்பட்டன.

இதனிடையே இந்த விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், வெங்கைய்யா நாயுடு, நிதின் கட்காரி ஆகியோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். விவசாயியின் தற்கொலை உள்நோக்கம் கொண்டகொலை என்ற அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யவேண்டும் என்று டெல்லி பிஜேபி தலைவர் சதீஸ் உபத்தியாயா வற்புறுத்தி உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...