சரக்கு மற்றும் சேவைவரி மசோதா மக்களவையில் நிறைவேறியது

 நீண்டகாலமாக நிலுவையில் இருந்த சரக்கு மற்றும் சேவைவரி மசோதா மக்களவையில் புதன் கிழமையன்று நிறைவேற்றப்பட்டது.

இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. சரக்கு மற்றும் சேவைவரி மசோதா மூலம் நாடுமுழுதும் ஒரே மறைமுக வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப் படவுள்ளது. இதற்காக நிபுணர்கள்குழு பரிந்துரை செய்த 27% வரி விதிப்பைக்கூட தளர்த்த நிதியமைச்சர் அருண்ஜேட்லி உறுதி அளித்துள்ளார்.

மேலும், மாநிலங்களின் வருவாய்க்கு எந்தவித பங்கமும் இந்த மசோதாவினால் ஏற்படாது என்றும் அப்படிவருவாய் இழப்பு ஏற்பட்டால் மத்திய அரசு அதன் இழப்பை ஏற்கும் என்றும் உறுதி அளிக்கப் பட்டுள்ளது.

இந்தமசோதாவுக்கு ஆதரவாக 352 வாக்குகள் அளிக்கப்பட்டது. எதிராக 37 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டது.
ஏப்ரல் 1, 2016 முதல் நடை முறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தினால் மாநில அரசுகள் வசூலிக்கும் சுங்கவரி, சேவைவரி, மாநில வாட்வரி, நுழைவு வரி, ஆக்ட்ராய் மற்றும் பிறவரிகள் சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஒரேகுடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் இந்த மசோதா சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த அருண்ஜேட்லி, "மசோதா என்பது நடனமாடும் ஒருஉபகரணம் கிடையாது, நிலைக் குழுவிலிருந்து நிலைக்குழு என்று அதனை தாவச் செய்து கொண்டே இருக்க முடியாது" என்றார்.

மேலும், "நிபுணர்கள் குழு பரிந்துரைசெய்த 27% வரி மிகவும் அதிகம், நிச்சயம் இது குறைக்கப்படும். நாடுமுழுதும் ஒரே வரி விதிப்பு முறை இருக்கும்போது பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும், வளர்ச்சி நோக்கி அடியெடுத்து வைக்க முடியும்" என்றார் அருண் ஜேட்லி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...