பேஸ் மேக்கர், மூட்டுசிகிச்சை கருவி மற்றும் செயற்கை வால்வுகள் ஆகியவற்றையும் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆர்டர் (டிபிசிஓ) திட்டத்தின் கீழ் கொண்டுவந்து, மருந்து மாஃபியாக்களின் ஆதிக்கத்தை ஒழிக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளதாக மத்திய உரம் மற்றும் மருந்துத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்தார்.
கொச்சியில் நடந்த மோடி அரசின் முதலாமாண்டு சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆனந்த் குமார் மேலும் கூறியதாவது: மருந்து மாஃபியாக்கள், அத்தியாவசிய மருந்துபொருட்கள், உபகரணங்களின் விலையை இஷ்டத்துக்கு ஏற்றி செய்து வரும் அட்டூழிகளை அடக்க நரேந்திர மோடி அரசு முடிவு செய்துள்ளது. அரசு தனது நடவடிக்கையை தொடங்கிவிட்டது.
இதய நோயாளிகள் பயன் படுத்தும் பேஸ்மேக்கர்கள், செயற்கை வால்வு மற்றும் மூட்டு அறுவையின் போது உள்ளே வைக்கப்படும் உபகரணங்கள் ஆகியவற்றின் விலையை கட்டுப் படுத்தும் நோக்கில் இவற்றை மருந்து விலை கட்டுப்பாட்டு ஆர்டர் திட்டத்தின் கீழ் கொண்டுவர உள்ளோம். ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களைகூட, ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்வரை விலை வைத்து விற்பனைசெய்ய இந்த மாஃபியாக்களால் முடிகிறது. இதற்கு அரசு முடிவுகட்டும். நாடுமுழுவதும் மலிவு விலை மருந்தகங்கள் கொண்டுவரப்படும். இவ்வாறு அனந்த் குமார் தெரிவித்தார்.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.