அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் வேலைபார்க்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கிடுக்கி பிடி

 நாட்டின் உயர் பதவி களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று, மத்திய, மாநில அரசுகளின் கீழ் ஐஏஎஸ் அதிகாரிகளாக பலரும் பணியாற்றி வருகின்றனர். அரசுகளின் சார்பில் பணி நிமித்தமாக அல்லது வேறு சில காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களில் சிலர் நாடுதிரும்பாமல் அங்கேயே தங்கி விடுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

தாம் சார்ந்துள்ள அரசுகளின் செல்வாக்கை பயன் படுத்தி, இவர்கள் செல்லும் நாடுகளில் தனியார் நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் சேர்ந்து கொள்கிறார்கள். தாங்கள் பணியாற்றிய அரசுகளிடம் முறையாக அனுமதி பெறாமல் இவ்வாறு சட்ட விரோதமாக தங்கிவிடும் செயலை தடுக்க முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சிலர், பல ஆண்டுகள் வெளிநாட்டில் பணியாற்றி சம்பாதித்தபின் மீண்டும் தங்கள் அரசுகளிடம் 'சமரசம்' பேசி இணைந்து கொள்கிறார்கள். இதை கவனத்தில்கொண்ட பிரதமர், இந்த அதிகாரிகள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளார்.

இதற்காக அவர், ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டுப் படுத்தும் மத்திய அரசின் நிர்வாகப் பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கு ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பாத வர்களின் பட்டியல் மற்றும் விவரத்தை சேகரித்து அனுப்பும்படி கேட்டிருக்கிறார்.

பொதுவாக நம் நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சட்ட திட்டங்கள் உறுதியாக இருப்பதுபோல் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இல்லை. மத்தியில் புதிய அரசு பதவி யேற்கும் போதெல்லாம் இந்த பிரச்னை கிளப்படுவது உண்டு. ஆனால் இதன் மீது முதல் முறையாக பிரதமர் மோடி நட வடிக்கை எடுக்க முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது"

நாடுமுழுவதும் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 6,270 . இதில் தற்போது பணியில் இருப்பவர்கள் 4,799 மட்டுமே.

மத்திய அரசுக்கு தேவைப் படும் ஐஏஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கை 952. ஆனால் தற்போது பணியில் இருப்பவர்கள் 643 மட்டுமே. சிவில்சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெறும் ஒருவருக்கு ஐஏஎஸ் பயிற்சிக்காக அரசு செலவழிக்கும் தொகை ரூ. 10 லட்சம் ஆகும். .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...