அவசர நிலை பிரகடனம் சரியா? காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்

 இந்தியாவில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது சரியா? என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டதன் 40-ஆவது ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, சண்டீகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு மேலும் பேசியதாவது:

அவசரநிலைக் காலத்தில் மக்களுக்கு மிகப் பெரிய அளவில் காங்கிரஸ் அநீதி இழைத்தது. மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப் பட்டன. ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி படுகொலை செய்தது. ஆனால், அதற்காக, காங்கிரஸ்கட்சி இது வரை மன்னிப்பு கோரவில்லை.

எனவே, அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டது சரிதானா? என்பதை காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்த வேண்டும். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் உதவியாளரான ஆர்கே.தவண், "சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவே அவச ரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது' என்று அண்மையில் கூறினார். இதுபோன்ற கருத்துகளையே காங்கிரஸ் தலைவர்களும் கூறிவருகின்றனர்.

அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டதற்காக, காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும், அவசரநிலைக் காலத்தை இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில், அதை வரலாற்றுப் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் எந்த அமைச்சர்மீதும் ஊழல் புகார் இல்லை. மக்கள் நலனை கருத்தில்கொண்டு, நாட்டின் வளர்ச்சியில் கவனம்செலுத்தி வருகிறோம். ஆனால், லலித் மோடி விவகாரத்தை வைத்து, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்துவருகின்றன. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடந்தது என அனைவரும் அறிவார்கள் என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...