காமராஜர் ஒருகட்சிக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல

 மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டுவது குறித்து பிரதமர் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

நாடார் மஹாஜன சங்கம் சார்பில், காமராஜரின் 113ஆவது பிறந்தநாள் விழா கல்வித்திருவிழாவாக, விருதுநகரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் வெங்கய்யநாயுடு மேலும் பேசியது:

மக்களுக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து கொள்பவர்கள் இறந்தாலும், மக்கள் மனதில் என்றென்றும் நினைவில் நிற்கின்றனர். அதற்கு உதாரணமாக காமராஜரை குறிப்பிடலாம். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் காமராஜர் திறம்படசெயலாற்றினார். ஆனால், இன்று அக்கட்சி மீளமுடியாத அளவுக்கு மக்களிடம் நம்பிக்கையை இழந்துவருகிறது.

நெருக்கடி நிலையை விரும்பாத காமராஜர், அன்றைய சூழலில் பலதலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்து வருந்தினார். அவர் ஒருகட்சிக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல. தேசத்தின் சொத்து.

காமராஜர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அவரை பாஜக போற்றுகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக, அவர் எத்தகையவழியில் செயலாற்றினாரோ, அதே வழியில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார். காமராஜர் ஆட்சிக்கும், நரேந்திர மோடியின் ஆட்சிக்கும் பலஒற்றுமைகள் உள்ளன.

இன்றைய சூழலில் பெரும்பாலான கட்சித்தலைவர்கள் முதலில் தனது நலம், பின்னர் கட்சிநலம், அதன் பிறகே நாட்டின் நலத்தை பற்றிக் கவலைப்படுகின்றனர்.

நாட்டின் நலனுக்கு பாஜக முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியல் என்பது தேர்தல்வரை மட்டும்தான் என பாஜக நம்புகிறது. அதற்கு பிறகு கட்சிபாகுபாடின்றி நாட்டின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதை அரசு, அரசியலாக பார்க்கவில்லை. மாநிலங்களில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அக்கட்சியுடன் இணக்கமாக செயல்பட்டு ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதே இலக்கு. மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டுவது குறித்து பிரதமர் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...