மனித நேயத்துடனேயே நான் உதவினேன்

 லலித் மோடியின் மனைவிக்கு புற்று நோய் உள்ளது. அவர் போர்ச் சுக்கலில் சிகிச்சை பெறவே நான் உதவினேன். என் இடத்தில் சோனியா இருந்தால், ஒருபெண் நோயாளி சாகட்டும் என்று விட்டுவிடுவாரா? மனித நேயத்துடனேயே நான் அவருக்கு உதவினேன் என்று மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ் விளக்கம் அளித்தார்.

லலித் மோடிக்கு விசா பெற உதவியதாக தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகுறித்து நண்பகல் 12.13 மணியளவில் விளக்கம் அளித்த சுஷ்மா சுவராஜ், , லலித்மோடிக்கு விசா வழங்குமாறு தான் எப்போதுமே பிரிட்டிஷ் அரசை வலியுறுத்த வில்லை . துரதிருஷ்டவசமாக, லலித் மோடிக்கு உதவியதாக என் மீது குற்றம்சாட்டப் பட்டுள்ளது. இது எனது மிக மோசமான நாட்கள். இதோடு இந்த பிரச்னை முடிந்துவிடும் என்று நம்புகிறேன்.

நான் பிரட்டிஷ் அரசை வலியுறுத்தி யிருந்தால், பேட்டி ஒன்றில், அவர்களே அதனை கூறியிருப்பார்கள். ஆனால், நான் அதை செய்யவில்லை என்றுதான் அவர்கள் கூறினார்கள். லலித்மோடி விசா பெற நான் எப்போதுமே பரிந்துரைக்கவில்லை.

இந்த சம்பவத்தில் எனக்கு அநீதி இழைக்கபட்டுள்ளது. எனது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க கூட எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.

லலித் மோடியின் மனைவிக்கு புற்று நோய் உள்ளது. அவர் போர்ச்சுக்கலில் சிகிச்சை பெறவே நான் உதவினேன். என் இடத்தில் சோனியா இருந்தால், ஒருபெண் நோயாளி சாகட்டும் என்று விட்டுவிடுவாரா? மனித நேயத்துடனேயே நான் அவருக்கு உதவினேன்.

நான்அவருக்கு உதவியது குற்றம் என்றால், அந்தகுற்றத்துக்கு எந்த தண்டனையை இந்தஅவை அளித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...