தூய்மை இந்தியாவை காண விரும்பிய காந்தியின் கனவை நனவாக்குவோம்

 "துப்புரவு என்பது சுதந்திரத்தை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது இப்படிச் சொன்னவர் மகாத்மா காந்தி என்பதைக் கேள்விப்படும் போது நமக்கு வியப்பு ஏற்படுகிறது.அவரது அன்றாட வாழ்க்கை முறையில் சுத்தமும் சுகாதாரமும் பிரிக்க முடியாத அங்கங்களாக இருந்தன.

அனைவருக்கும் சுகாதாரம் என்பது அவரது கனவாக இருந்தது.
'எனது மனதில் கூட எவரும் தனது அழக்கடைந்த பாதங்களுடன் உலவ நான் விட மாட்டேன்' என்று கூறியுள்ளார் அவர்.

'மேலை நாடுகளின் பல பழக்கங்களை அவர் குறை கூறியுள்ளார். ஆனால் தான் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் அவர்களிடமிருந்தே கற்றதாகக் கூறியுள்ளார்.அவைகளை நம் நாட்டிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

'ஒரு கழிப்பறை, வரவேற்பறையப் போல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் தெரிந்து கொண்டேன். இதை நான் மேல் நாட்டைப் பார்த்துதான் அறிந்து கொண்டேன்.பல நோய்களுக்குக் காரணம் நமது கழிப்பறைகளின் அசுத்தமான நிலையே. மேலும் மனிதக் கழிவுகளை அங்கிங்கெனாதபடி எங்கு வேண்டுமானாலும் கொட்டுவதும் மற்றொரு காரணம் ஆகும் ' (நவ ஜீவன் 24.05.1925)

காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2,2014 அன்று மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுமைக்குமான 'ஸ்வச்ச பாரத் 'அல்லது 'தூய்மை இந்தியா ' என்ற ஒரு திட்டத்தைத் துவக்கி வைத்தார். இதன்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் கழிப்பறையுடன் கூடிய முழுமையான சுகாதார வசதி, திட மற்றும் திரவக் கழிவுகளை அகற்றும் வசதி, கிராமசுகாதாரம், பாதுகாக்கப்பட்ட, சுத்தகரிக்கப்பட்ட, போதுமான அளவு குடிநீர் இவை உறுதி செய்யப்படும். இத்திட்டம் காந்திஜி பிறந்து 150 ஆண்டுகள் நிறைவடையும் அக்டோபர் 2, 2019 க்குள் நிறைவேற்றப் பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி ஒரேநாடு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...