அவசர அவசரமாக அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதில் , கூட்டணி கட்சியினர் கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர். வேட்பாளர் பட்டியல் ஜெயலலிதாவின் விருப்பம் இல்லாமல் சசிகலா குடும்பத்தினரின் விருப்பத்துக்கு இணங்க வெளியிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது .
இது பற்றி விசாரித்த போது, கூட்டணி கட்சி தொகுதி தவிர,
மற்ற இடங்களுக்கான பட்டியலை இரண்டு வாரங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டார்; விருப்ப மனுதாக்கல் மற்றும் புகார்கள் அடிப்படையில் ஒரு சில தொகுதிகளில் வேட்பாளகளை மாற்றம் செய்தாலும் , இறுதி பட்டியலை ஜெயலலிதா தயாரித்து, திருப்தியடைந்தார் என, தெரிகிறது . இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்ட 160 பேர் பட்டியலில், 70 முதல் 75 தொகுதிகள், சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது . இதை நேற்று முன்தினம் மாலை, பட்டியல் அறிவிக்கப்படும் சற்று முன்பாக , கவனித்த ஜெயலலிதா பலரது தொகுதி மற்றும் பெயர் மாறியிருப்பது தொடர்பாக அதிர்ச்சி அடைந்தார். மிகக்கோபமாக இது பற்றி ஜெயலலிதா கேட்டபோது, சாக்கு போக்கு கூரப்பட்டது பட்டியலை மாற்ற இயலாதபடி, சசிகலா மற்றும் அவரது சகாக்கள் பிடிவாதம் பிடித்துள்ளனர். ஒரு கட்டத்தில், கோபமாக சென்றுவிட்டதாக தெரிகிறது அதைதொடர்ந்து, தன் உதவியாளர் தவிர அவர், யாரையும் சந்திக்கவில்லை.
தற்போது வெளியாகி இருக்கும் பட்டியல், சசிகலாவின் குடும்பத்தை பலப்படுத்தும் வகையிலும் இருப்பதாக, அதிமுக,வினரே கருதுகின்றனர். பட்டியலும், தொகுதியும் மாற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதனிடையே கூட்டணி கட்சிகளின் அதிருப்தியும், ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.