நாட்டில் மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டுள்ளது

நாட்டில் மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு தற்போது மின் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உள்கட்டமைப்பு துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகுறித்து அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வெள்ளிக் கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மின்சாரம், நிலக்கரி, துறை முகங்கள் ஆகிய துறைகள் குறித்தும், டிஜிட்டல் இந்தியாதிட்டம் குறித்தும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்தாலோசித்தார்.

அப்போது, பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இது வரை 1,371 செல்லிடப் பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு மின் வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள கிராமங்களுக்கு விரைவில் மின் வசதி செய்துதரப்படும் என்றும் பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம், 39.5 ஜிகாபைட் மின் உற்பத்தி எட்டப்பட்டு விட்டதாகவும், 2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாபைட் மின் உற்பத்தி செய்யப்படும் எனவும் இக்கூட்டத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

"அனைவருக்கும் இல்லம்' திட்டம்குறித்து ஆலோசனை நடைபெற்ற போது, திட்டத்தை துரிதமாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...