நாட்டில் மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டுள்ளது

நாட்டில் மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு தற்போது மின் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உள்கட்டமைப்பு துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகுறித்து அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வெள்ளிக் கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மின்சாரம், நிலக்கரி, துறை முகங்கள் ஆகிய துறைகள் குறித்தும், டிஜிட்டல் இந்தியாதிட்டம் குறித்தும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்தாலோசித்தார்.

அப்போது, பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இது வரை 1,371 செல்லிடப் பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு மின் வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள கிராமங்களுக்கு விரைவில் மின் வசதி செய்துதரப்படும் என்றும் பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம், 39.5 ஜிகாபைட் மின் உற்பத்தி எட்டப்பட்டு விட்டதாகவும், 2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாபைட் மின் உற்பத்தி செய்யப்படும் எனவும் இக்கூட்டத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

"அனைவருக்கும் இல்லம்' திட்டம்குறித்து ஆலோசனை நடைபெற்ற போது, திட்டத்தை துரிதமாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...