நாட்டில் மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டுள்ளது

நாட்டில் மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு தற்போது மின் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உள்கட்டமைப்பு துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகுறித்து அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வெள்ளிக் கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மின்சாரம், நிலக்கரி, துறை முகங்கள் ஆகிய துறைகள் குறித்தும், டிஜிட்டல் இந்தியாதிட்டம் குறித்தும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்தாலோசித்தார்.

அப்போது, பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இது வரை 1,371 செல்லிடப் பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு மின் வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள கிராமங்களுக்கு விரைவில் மின் வசதி செய்துதரப்படும் என்றும் பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம், 39.5 ஜிகாபைட் மின் உற்பத்தி எட்டப்பட்டு விட்டதாகவும், 2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாபைட் மின் உற்பத்தி செய்யப்படும் எனவும் இக்கூட்டத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

"அனைவருக்கும் இல்லம்' திட்டம்குறித்து ஆலோசனை நடைபெற்ற போது, திட்டத்தை துரிதமாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...