நாட்டில் மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டுள்ளது

நாட்டில் மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு தற்போது மின் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உள்கட்டமைப்பு துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகுறித்து அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வெள்ளிக் கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மின்சாரம், நிலக்கரி, துறை முகங்கள் ஆகிய துறைகள் குறித்தும், டிஜிட்டல் இந்தியாதிட்டம் குறித்தும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்தாலோசித்தார்.

அப்போது, பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இது வரை 1,371 செல்லிடப் பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு மின் வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள கிராமங்களுக்கு விரைவில் மின் வசதி செய்துதரப்படும் என்றும் பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம், 39.5 ஜிகாபைட் மின் உற்பத்தி எட்டப்பட்டு விட்டதாகவும், 2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாபைட் மின் உற்பத்தி செய்யப்படும் எனவும் இக்கூட்டத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

"அனைவருக்கும் இல்லம்' திட்டம்குறித்து ஆலோசனை நடைபெற்ற போது, திட்டத்தை துரிதமாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...