அதிமுக, திமுக இரண்டுமே ஊழல்கட்சிகள்

அதிமுக, திமுக இரண்டுமே ஊழல்கட்சிகள் , 50 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் முன்னேற வில்லை என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
.

பால்கொள்ளை, மணல் கொள்ளை என பல்வேறு கொள்ளைகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி வேண்டுமா? மாற்றம் வேண்டுமா? வளர்ச்சி வேண்டுமா? என்பதை தீர்மா னிக்கும் தேர்தலே இது. ஊழலா? வளர்ச்சியா? என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கவேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுக்கு நீங்கள் மாறி மாறி வாக்களித்து இருக்கிறீர்கள். இந்த இருகட்சிகளுமே ஊழலில் திளைத்த கட்சிகள். திமுக மீது 2ஜி ஊழல், ஏர்செல் மேக்சிஸ் ஊழல்கள் உள்ளன.

அதிமுக தலைமை சொத்துகுவிப்பு வழக்கில் சிறைசென்று விட்டு வந்துள்ளது. பால்கொள்முதலில் ஊழல் நடந்திருக்கிறது. மணல் கொள்ளையில் ரூ.20 ஆயிரம்கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது.ஊழலில் ஊற்றுக் கண்களாக விளங்கும் இந்த இருகட்சிகளையும் புறக்கணியுங்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் ஒரேகுடும்பத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது.

2014 மக்களவை தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பி நரேந்திரமோடிக்கு வாக்களித்தார்கள். கடந்த 2 ஆண்டுகளாக மோடி அரசு மீது எந்தபுகாரும் இல்லை. ஊழலற்ற ஆட்சி மத்தியில் நடந்துகொண்டிருக்கிறது. அதே மாற்றம் தமிழகத்தில் ஏற்பட வேண்டுமானால் நீங்கள் பிஜேபிக்கு தாமரைசின்னத்திலும், கூட்டணி வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னங்களிலும் வாக்களிக்க வேண்டும்.கடந்த டிசம்பரில் மழைவெள்ளம் ஏற்பட்டபோது பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ஓடோடி வந்தார். ஆனால் மாநில அரசோ உறங்கிக் கொண்டிருந்தது.

வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.2000 கோடியை வளர்ச்சி திட்டங்களுக்கு வழங்காமல் அம்மா பெயரில் நிவாரணம் வழங்கப் பட்டது.ரேஷன் கடைகளில் இலவச அரிசி திட்டத்துக்கு கிலோ ஒன்றுக்கு மத்திய அரசு ரூ.3 கொடுக்கிறது. ஆனால் இதைமறைத்து விட்டு அம்மா அரிசி என்று இலவசமாக கொடுக்கிறார்கள். மின் துறையை சீரமைத்து பயனளிக்கும் வகையில் உதய்திட்டம் கொண்டுவரப்பட்டது.ஆனால் தங்களுக்கு எதுவும் கிடைக்காது என்பதால் மாநில அரசு இதை புறக்கணித்து விட்டது.

இதே போல் மத்திய அரசின் ரூ.12 பிரிமிய தொகையுடன் காப்பீட்டு திட்டம் உள்பட பல்வேறு நலத் திட் டங்கள் மாநில அரசால் மக்களிடம் கொண்டு செல்லப்பட வில்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...