யாத்திரையை திசை திருப்பும் திமுக

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் “என் மண், என் மக்கள்’ யாத்திரையை பொது மக்களிடமிருந்து திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதாக பாஜக தமிழக இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

தில்லியில் பாஜக தேசியத் தலைமை அலுவலகத்தில், அண்ணாமலையின் “என் மண் – என் மக்கள்’ யாத்திரை தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பி. சுதாகர் ரெட்டி கூறியதாவது:

ராமேசுவரத்தில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடங்கி வைத்தார். பொது மக்களிடம் இருந்து கிடைக்கும் பெரும் அளவிலான வரவேற்பால் தற்போது இந்தயாத்திரை மக்கள் யாத்திரையாக மாறியுள்ளது.

அண்ணாமலை மேற்கொள்ளும் இந்தயாத்திரையால் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட திமுக, தமிழகமக்களை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சநாதன தர்மம் இந்துமக்களின் வாழ்க்கை நெறி. உலக அளவில் பிரதமர் மோடியின் புகழையும், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, சநாதன தர்மம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

“இந்தியா’ கூட்டணியில் திமுகவுடன் அங்கம்வகிக்கும் காங்கிரஸ் கட்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், திமுகவையும் இந்தவிவகாரத்தில் கண்டிக்காதது ஏன் என்றார் பி. சுதாகர் ரெட்டி.

தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில், “தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்படுத்திவருகிறார். இரண்டாம்கட்டத்தில் உள்ள அவரது “என் மண் என் மக்கள்’ யாத்திரை 55 சட்டப்பேரவைத் தொகுதிகளையும்,11 மக்களவைத் தொகுதிகளையும் அடைந்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்திய சமூக நலத்திட்டங்களால் தமிழகம் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது குறித்து 5 லட்சம் புத்தகங்களை தமிழகம்முழுவதும் பொதுமக்களிடம் விநியோகித்து வருகிறோம். இந்தயாத்திரையில் கொண்டுசெல்லப்படும் புகார் பெட்டியில் திமுக மீது ஆயிரக்கணக்கில் மக்கள் ஊழல் புகார்களை அளிக்கின்றனர் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...