யாத்திரையை திசை திருப்பும் திமுக

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் “என் மண், என் மக்கள்’ யாத்திரையை பொது மக்களிடமிருந்து திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதாக பாஜக தமிழக இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

தில்லியில் பாஜக தேசியத் தலைமை அலுவலகத்தில், அண்ணாமலையின் “என் மண் – என் மக்கள்’ யாத்திரை தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பி. சுதாகர் ரெட்டி கூறியதாவது:

ராமேசுவரத்தில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடங்கி வைத்தார். பொது மக்களிடம் இருந்து கிடைக்கும் பெரும் அளவிலான வரவேற்பால் தற்போது இந்தயாத்திரை மக்கள் யாத்திரையாக மாறியுள்ளது.

அண்ணாமலை மேற்கொள்ளும் இந்தயாத்திரையால் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட திமுக, தமிழகமக்களை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சநாதன தர்மம் இந்துமக்களின் வாழ்க்கை நெறி. உலக அளவில் பிரதமர் மோடியின் புகழையும், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, சநாதன தர்மம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

“இந்தியா’ கூட்டணியில் திமுகவுடன் அங்கம்வகிக்கும் காங்கிரஸ் கட்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், திமுகவையும் இந்தவிவகாரத்தில் கண்டிக்காதது ஏன் என்றார் பி. சுதாகர் ரெட்டி.

தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில், “தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்படுத்திவருகிறார். இரண்டாம்கட்டத்தில் உள்ள அவரது “என் மண் என் மக்கள்’ யாத்திரை 55 சட்டப்பேரவைத் தொகுதிகளையும்,11 மக்களவைத் தொகுதிகளையும் அடைந்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்திய சமூக நலத்திட்டங்களால் தமிழகம் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது குறித்து 5 லட்சம் புத்தகங்களை தமிழகம்முழுவதும் பொதுமக்களிடம் விநியோகித்து வருகிறோம். இந்தயாத்திரையில் கொண்டுசெல்லப்படும் புகார் பெட்டியில் திமுக மீது ஆயிரக்கணக்கில் மக்கள் ஊழல் புகார்களை அளிக்கின்றனர் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...