புதினாவின் மருத்துவக் குணம்

 இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், குழம்பு முதலியவைகளில் கறிவேப்பிலையைப் போல வாசனைக்காகப் போடுவது வழக்கம். துவையல் செய்து உண்ணலாம். வாயுவைப் போக்கும். பசி உண்டாகும். அஜீரணத்தை மாற்றும். தீனிப்பைக்கும், குடலுக்கும் வலிவு கொடுக்கும். விக்கல், குமட்டல் நீக்கியாகவும், மாதவிடாயை ஒழுங்கு படுத்தியாகவும் செயல்படுகிறது.

தேவையான அளவு புதினாக் கீரையை எடுத்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து காலை, மாலை பல் துலக்கிவர சகல பல் கோளாறுகளும் குணமாகும். தேவையானால் எட்டில் ஒரு பங்கு உப்புச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

ஒரு சிலருக்கு பித்தம் காரணமாக அடிக்கடி குமட்டல் ஏற்படும். ஆனால் வாந்தி வராது. இதற்கு ஒரு கைப்பிடியளவு புதினாக் கீரை எடுத்து சட்டியிலிட்டு பாக்களவு இஞ்சித் துண்டும், 10 மிளகும் நைத்துப்போட்டு கீரையை வதக்கி 200 மி.லி தண்ணீர்விட்டு 100 மி.லியாக சுண்டக்காய்ச்சி 50 கிராம் பனைவெல்லம் சேர்த்து குமட்டல் வரும் சமயம் கொஞ்சம் கொடுத்துவர குமட்டல் குணமாகும்.

புதினாக் கீரையை கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியிலிட்டு காலிட்டர் தண்ணீர்விட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி வேளைக்கு ஒரு சங்களவு காலை, மதியம், மாலையாகக் கொடுத்து வர வயிற்றுப்போக்கு, வாந்தி நின்றுவிடும்.

புதினாக் கீரையை எடுத்து வெயிலில் உலர்த்தி இடித்து சூரணமாக்கி காலை, மதியம், மாலையாக அரைத்தேக்கரண்டி சூரணத்தை தேனில் குலைத்துக் கொடுக்க தடைபட்ட மாதவிடாய் ஒழுங்காக வெளியேறும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...