பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து

சுதந்திரதினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் அங்கு நாட்டுமக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுவது மரபாக உள்ளது. சுதந்திரதின உரையை நிகழ்த்தும் பிரதமர்கள் வழக்கமாக குண்டுதுளைக்காத பாதுகாப்பு கூண்டிற்குள் நின்றுபேசுவது வழக்கம். ஆனால், பிரதமர் நரேந்திர  மோடி, தான் பொறுப்பேற்றதில் இருந்து மரபுகளை களைந்து திறந்தவெளியில் நின்று பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்துள்ளது. எனவே, சுதந்திர தினத்தன்று உரையாற்றும்போது, குண்டு துளைக்காத கூண்டினுள் இருந்து உரையாற்றவேண்டும் என உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனை பாதுகாப்பு ஆலோசகரிடம் உளவுத்துறை தெரிவித்துள்ளது என்றும், அவரதுபாதுகாப்பு அறிவுரையை, மோடி அலட்சியப்படுத்த மாட்டார் என்பதால் அவரிடம் இந்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் விவகாரம் மட்டுமின்றி, அல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள், ஆங்காங்கே அதிகரித்துவரும் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை கருத்தில்கொண்டும், உளவுத்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையிலும் இந்த எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாறுகாணாத பாதுகாப்பு டெல்லியில் போடப்படவுள்ளது என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...