மகளிர் தினத்தன்று பெண்களுக்கு கவுரவம்

மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று நடைபெறும் குஜராத் நிகழ்வில், இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்கள் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தனது சமூக வலைதள கணக்குகளை பெண்களிடம் ஒப்படைக்க உள்ளார். அன்றைய தினம் பெண்கள் பிரதமர் மோடியின் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்விற்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முழுக்க முழுக்க பெண் போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிரதமர் மோடியின் பாதுகாப்பை பெண் போலீசார் உறுதி செய்வார்கள். பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக 2,300க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையைப் பற்றி குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியதாவது: இந்திய வரலாற்றில் முதல்முறையாக, வான்சி போர்சி கிராமத்தில் உள்ள ஹெலிபேடிற்கு பிரதமரின் வருகையிலிருந்து, மகளிர் தினம் கொண்டாட்டம் நடைபெறும் இடம் வரை அவரது பாதுகாப்பிற்கு பெண் போலீசார் மட்டுமே பொறுப்பாவார்கள்’ என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...