ரயில் விபத்து அமைச்சர் சுரேஷ் பிரபு நேரில் ஆய்வு

உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் அருகே இந்தூர் – பாட்னா விரைவுரயில் தடம்புரண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 125-ஆக உயர்ந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயம டைந்துள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப் படுகிறது. இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சம்பவம் நிகழ்ந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மத்தியபிரதேச மாநிலம் பாட்னா இடையே செல்லும் 22 பெட்டிகள்கொண்ட இந்தூர் – பாட்னா விரைவுரயில் நேற்று மதியம் 2 மணிக்கு இந்தூரில் இருந்து புறப்பட்டது. போபால், ஜான்சி, கான்பூர், லக்னோ, வாரணாசி வழியாக பாட்னா செல்லக்கூடிய இந்த ரயில், அதிகாலை 3 மணி அளவில் ரயில் கான்பூரை அடுத்த புர்கராயம் என்ற இடத்தில் திடீரென்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.  

ரயில் அப்போது வேகமாக சென்றுகொண்டு இருந்ததால் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி தண்டவாளத்தை விட்டு விலகி ஓடி கவிழ்ந்தது. இதில் ரயிலின்14 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் ‘எஸ்1, எஸ்2, எஸ்3, எஸ்4' பெட்டி மிக மோசமான அளவுக்கு சேதம் அடைந்தது. அந்தப்பெட்டியில் இருந்த பலர் உயிரிழந்தனர்.

இதுவரை 125 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகி உள்ளது. 250 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களில் பலத்த காயமடைந்துள்ள 76 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து ரயில்வே மீட்பு குழுவினர், போலீஸார் மற்றும் தீயமணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் 30 ஆம்புலன்ஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காயமின்றி மீட்கப்பட்ட பயணிகள் சிறப்பு பேருந்துகள் மூலம் அவரவர் செல்லவேண்டிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

 

ரயில் விபத்து குறித்து தகவல் அறிய இந்தூர், உஜ்ஜைன், ரத்லம், ஓராய், ஜான்ஷி, பொக்ரயான் ஆகிய ரயில் நிலையங்களில் தொலைபேசி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

உத்தரப்பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு நரேந்திர பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன் பேசியதாகவும், மீட்புப்பணிகளை அவர் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விபத்து நிகழ்விடத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசியபேரிடர் மீட்புப்படையை அனுப்ப உத்தரவிட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. எதிர்பாராமல் நடந்த இந்தவிபத்தில் அனைத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்த உத்தரவிட்டுள்ளதாகவும், விபத்து நிகழ்ந்த இடத்தில் ரயில்வே உயரதிகாரிகளும் அப்பகுதியைசேர்ந்த எம்பி, எம்எல்ஏக்களும் மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர். மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வருகிறார்கள் என அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தினை மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு மாலை 7.30 மணியளவில் நேரில்சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

120 பேரை பலி கொண்ட இந்த ரயில்விபத்து நாட்டு மக்களை பெரும்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகளும், நிவாரண பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...