மேற்குவங்கத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படவேண்டும்

மேற்குவங்கத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும், இதற்கு துணைபோகும் மாநில அரசுக்கு ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகிலபாரத பிரதிநிதிகள் சபைக்குழு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அகில பாரத தலைவர் மோகன் பகவத், தலைமை வகித்தார். பொதுசெயலர் சுரேஷ்ஜோஷி, கேரள மற்றும் தென்பாரத அமைப்பாளர் வன்னியராஜன், செய்திதொடர்பாளர் மன்மோகன் மைத்ரியா இணைசெயலாளர்கள் சுரேஷ் சோனி, கிருஷ்ணகோபால், பாகையாஜி, மற்றும் உறுப்பினர்கள் பலர்கலந்து கொண்டனர்.

 

3 நாட்கள் நடந்த மாநாட்டின் நிறைவுவிழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இது தொடர்பாக அகில பாரத இணை செயலர் தத்தாத்ரேயா கோச பலே நிருபர்களிடம் கூறியதாவது: நாடுமுழுவதும் ஆர்.எஸ்.எஸ்., நல்லவளர்ச்சி கண்டுள்ளது. குமரி முதல் இமயம்வரை எங்களின் அமைப்பை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். மணிப்பூர் மற்றும் குஜராத்தில் முன்னேற்ற நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வலுப் பெற்றுள்ளது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாகா அமைப்பில்சேர்ந்துள்ளனர்.

இந்த பொதுக்குழுவில் முக்கியமாக, மேற்கு வங்கம், வங்கதேச எல்லையில் இஸ்லாமிய அமைப்பினர் அத்துமீறி நடந்துவருவது விவாதிக்கப்பட்டது. இது கவலை அளிக்கிறது. இங்கு வாழும் இந்துக்கள் பாதுகாப்பை மாநில, மத்திய அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். இதற்கான ஒரு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம்.

 

மேற்குவங்கத்தில் முஸ்லிம் ஓட்டுவங்கி தொடர்பாக மாநில ஜிகாதி இன வெறி, தேசவிரோத சக்தியை ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால் மாநிலத்தில் இந்துக்கள்வளர்ச்சி குறைந்து வருகிறது. காலியாசக் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் மீது ஜிகாதிதாக்குதல் காரணமாக ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. தேசிய பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளது. இந்துக்கள் வெளியேறிவருகின்றனர். கள்ளநோட்டுகள் கடத்தல் பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் உள்ளிட்ட வன்செயல்கள் தொடர்கிறது. இங்கு கலவரம் தூண்டப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...