திராட்சையின் மருத்துவக் குணம்

 திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ஊட்டமளிப்பது. புத்துணர்ச்சியூட்டதக்க குளிர்ச்சியான கனி திராட்சை.

நன்றாக நீர்ப்போக்கைத் தூண்டும். இது தாகத்தையும் தணித்து, வயிறு எரிச்சலை மட்டுப்படுத்தும். காய்ச்சல், ஆஷ்துமா, நெஞ்சக நோய், தொழுநோய், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குரல் கோளாறு, வாந்தி, உடல் பருமன், வீக்கங்கள், நெடு நாளைய காமாலை என பல்வேறு உடல் கோளாறுகளையும் குணமாக்கும். குடலில் அமிலத் தன்மை ஏற்படுவதைத் தவிர்த்துவிடும்.

இளமையைத் தக்கவைத்து முதுமையை அண்டவிடாமல் திராட்சை பாதுகாக்கிறது. மிகுந்த சத்துள்ள உணவு திராட்சை. வயிறு எரிச்சலைக் குறைத்து செரிமானத்தைச் சீராக்கி, வாயுப் பொருமலைப் போக்கவும் செய்கிறது.

சிறுநீரகக் கற்கள், சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற சிறுநீரகத் தொல்லைகளை குணமாக்கும் அருமருந்து திராட்சை கனிகள். ஒழுங்கற்ற, வலியுடன் கூடிய மாதவிலக்கு, அதிக ரத்தப்போக்கு, மூட்டுவலி இவற்றைச் சரிசெய்ய வல்லது திராட்சை.

திராட்சையில் சர்க்கரைத் தன்மை கூடுகிறது. திராட்சையிலுள்ள குளுகோஸ் வகையிலானது. மற்ற பழங்களைக் காட்டிலும் திராட்சையிலுள்ள குளுகோஸ் அளவில் மிக அதிகம். இந்தப் பழத்திலுள்ள குளுகோஸ் எளிதில் உடலில் சத்தாக உறிஞ்சப்பட்டுவிடும்.

மிகக்குறைந்த அளவே இரும்புச்சத்து இருந்தாலும் எளிதாக உடலில் சேர்வதால், ரத்தச் சோகைக்கு திராட்சை பழங்களும் உதவி செய்யும். 3௦௦ மில்லி லிட்டர் திராட்சைச்சாறு பருகினாலே போதும், ரத்தச்சோகை நோயை எதிர்த்து உடலுக்கு வலுவேற்றும்.

திராட்சைப் பழத்தில் மாலிக், சிட்ரிக், டார்டாரிக் அமிலங்கள் உள்ளன. இவை ரத்தத்திலுள்ள நச்சை சுத்திகரித்து, மலம் கழிவதற்கான பெருங்குடல் தூண்டுதலுக்கும் உதவுகின்றன. சிறுநீரகங்களுக்கும் மருத்துவரீதியாகப் பக்கப்பலமாக உள்ளது.

திராட்சையை கொத்தாகப் பறித்து, பழங்களைக் கழுவிவிட்டு வாயிலிட்டு தின்னலாம். ஆனாலும், திராட்சையைச் சாறாக அருந்துவதே மிகுந்த பலன் தரக் கூடியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...