ஆழ்கடல் மீன்பிடிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன

ராமேஸ்வரம் மீனவர்கள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து பேசினர்.இதன்பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மீனவர் கொல்லப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்த சுஷ்மா, இரங்கல் தெரிவித்தார். கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கும், காயமடைந்த மீனவர் குடும்பத்திற்கும் நிவாரணம்வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் கொல்லப்பட்டதற்கு இலங்கை அதிபர் சிறிசேன வருத்தம் தெரிவித்துள்ளார்.


மீனவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது. சுடக்கூடாது என்பது ஒப்பந்தம். இதைமீறி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது கவலைதரும் விஷயம். துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா உறுதியளித்துள்ளார்.


ஆழ்கடல் மீன்பிடிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன. இதற்கான, ரூ.1,500 கோடி திட்டத்தை மத்தியஅரசு வகுத்துள்ளது. இதில் மத்திய அரசு சார்பில் ரூ.750 கோடி, மாநில அரசுசார்பில் ரூ.750 கோடி ஒதுக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான பயிற்சி துவங்கியுள்ளது. இதற்கு காலஅவகாசம் வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா கூறியுள்ளார். வரும் மே மாதம் பிரதமர் இலங்கைசெல்ல உள்ளார். அதற்குமுன்னர் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...