ஆழ்கடல் மீன்பிடிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன

ராமேஸ்வரம் மீனவர்கள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து பேசினர்.இதன்பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மீனவர் கொல்லப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்த சுஷ்மா, இரங்கல் தெரிவித்தார். கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கும், காயமடைந்த மீனவர் குடும்பத்திற்கும் நிவாரணம்வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் கொல்லப்பட்டதற்கு இலங்கை அதிபர் சிறிசேன வருத்தம் தெரிவித்துள்ளார்.


மீனவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது. சுடக்கூடாது என்பது ஒப்பந்தம். இதைமீறி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது கவலைதரும் விஷயம். துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா உறுதியளித்துள்ளார்.


ஆழ்கடல் மீன்பிடிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன. இதற்கான, ரூ.1,500 கோடி திட்டத்தை மத்தியஅரசு வகுத்துள்ளது. இதில் மத்திய அரசு சார்பில் ரூ.750 கோடி, மாநில அரசுசார்பில் ரூ.750 கோடி ஒதுக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான பயிற்சி துவங்கியுள்ளது. இதற்கு காலஅவகாசம் வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா கூறியுள்ளார். வரும் மே மாதம் பிரதமர் இலங்கைசெல்ல உள்ளார். அதற்குமுன்னர் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...