ஆதரவளிக்கக் கோரி எம்.பி.க்களுக்கு கடிதம்

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வெங்கய்யநாயுடு, தமக்கு ஆதரவளிக்கக் கோரி அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.


குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வரும் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிசார்பில் வெங்கய்ய நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக் கவுள்ளனர்.
இந்நிலையில், தமக்கு ஆதரவளிக்கக் கோரி, அனைத்து எம்.பி.க்களுக்கும் வெங்கய்யநாயுடு கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:


நமது அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளிலும், கூட்டாட்சிதத்துவ கோட்பாடுகளிலும் நான் தீவிர நம்பிக்கை கொண்டவன். மத்திய அமைச்சராக பணியாற்றிய காலக் கட்டங்களில், தீவிர உழைப்பாலும் ஆர்வத்தாலும் புதியதிட்டங்களை உருவாக்குவதிலும், அதனை நடைமுறைப் படுத்துவதிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தேன். மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில், மாநில அரசுகளும் பங்காற்றுவதை உறுதிசெய்தேன்.


மாநிலங்களவையின் பங்களிப்பு: அரசியல் ஜனநாயகத்தின் தூணாகவிளங்கும் மாநிலங்களவை, புதிய இந்தியாவை கட்டமைப்பதில் பல்லாண்டுகளாக முக்கியபங்காற்றி வருகிறது. வளர்ந்து வரும் நாடு என்ற முறையில், வறுமை, எழுத்தறிவின்மை, பாலின பாகுபாடு, ஊழல் உள்ளிட்டவற்றை ஒழிக்கவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. நாட்டுமக்கள் அனைவருக்குமான சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்.


சுதந்திரத்துக்கு பின் நாட்டில் அமைந்த அனைத்து அரசுகளும் நாட்டின் வளர்ச்சியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்சென்றுள்ளன. ஆனால், இன்னமும் செய்ய வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. பயங்கரவாதம், பருவநிலை மாறுபாடு உள்ளிட்டவை நமக்கு பெரும்சவால்களாக உள்ளன.


குடியரசுத் துணைத்தலைவராக நான் பொறுப்பேற்றால், இந்திய குடியரசுத் தலைவரின் கரத்தை வலுப்படுத்துவதுடன், 'பன்முகத் தன்மையும், வேற்றுமையில் ஒற்றுமையுமே நமது நாட்டின் தூண்கள்' என்ற அவரது கருத்தின்படி செயலாற்றுவேன். குடியரசு துணைத்தலைவர் அலுவலகத்தின் மாண்பையும், நமது அரசியலமைப்பு பாரம்பரியத்தையும் பாதுகாப்பேன் என உறுதியளிக்கிறேன் என்று தனது கடிதத்தில் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...