மதுரை தோப்பூரில், 1,264 கோடி ரூபாயில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க, மத்தியஅரசு ஒப்புதல் அளித்தது. 202 ஏக்கரில், 750 படுக்கை வசதியுடன், கட்டுமானப்பணி, 48 மாதங்களில் நிறைவடையும். இங்கு, 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 60 பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான இடங்கள் அனுமதிக்கப்படும். கட்டுமானம், செயல்பாடு, பராமரிப்பு முழுவதும், மத்திய அரசால் மேற்கொள்ளப்படும்.
மக்களுக்கு உயர்தர சிகிச்சை வசதிகிடைப்பது மட்டுமின்றி, அதிக டாக்டர்கள், சுகாதார ஊழியர்களை உருவாக்க பயன்படும். இதற்கு, இன்று காலை, 11:30 மணிக்கு, மதுரை, மண்டேலா நகர் ரிங் ரோடு பகுதியில் நடந்த விழாவில்,பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.அரசு மருத்துவகல்லுாரிகள் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒருபகுதியாக, மதுரை, தஞ்சாவூர் மற்றும் நெல்லை மருத்துவக் கல்லுாரிகளில், 450 கோடி ரூபாயில், கட்டப்பட்ட பல் நோக்கு உயர் சிகிச்சை பிரிவு களையும், பிரதமர் திறந்துவைத்தார்
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.