எய்ம்ஸ் மருத்துவமனை சுகாதாரத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை வரும் – மோடி பேச்சு

பீஹார் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது சுகாதாரத் துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பீஹார் மாநிலம் தர்பங்காவில் ரூ.12,100 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர் பல கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். தர்பங்காவில் ரூ.1,260 கோடி மதிப்பு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர் ரூ.5,070 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

பீஹார் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது சுகாதாரத் துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும். எய்ம்ஸ் மருத்துவமனையால் மேற்குவங்கத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகள் பலன் அடையும். எய்ம்ஸ் மருத்துவமனையால் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். பீஹாரில் நிதிஷ் குமார் ஆட்சிக்கு வந்த பின், நிலைமை மேம்பட்டது. பீஹார் மாநிலம் வளர்ச்சி அடைந்து வருகிறது.

மக்கள் நலனுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. எங்கள் அரசு எப்போதும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்காகவே நிற்கிறது. ஆயுஷ்மான் பாரத் யோஜனா மருத்துவத் திட்டம் இல்லாவிட்டால், பலர் மருத்துவமனையை அணுக முடியாமல் அவதிப்பட்டு இருப்பார்கள். முந்தைய அரசுகள் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்தன. பீஹாரில் முந்தைய அரசுகள் சுகாதார உள்கட்டமைப்பு குறித்து ஒருபோதும் கவலைப்படவில்லை. நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இருப்பினும், எங்கள் அரசு நாட்டின் பல பகுதிகளில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை நிறுவியுள்ளது. இன்று நாட்டில் 24 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. ஒருவர் தாய்மொழியில் மருத்துவக் கல்வி பெற்று டாக்டர் ஆகலாம் என்று எங்கள் அரசு முடிவு செய்தது.

முதல் கவனம் நோயை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2வது நோயை கண்டறிவதில் கவனம் செலுத்துகிறது. மூன்றாவது கவனம் மக்களுக்கு இலவச மற்றும் மலிவான சிகிச்சையைப் அளிக்க வேண்டும். நான்காவது கவனம் சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதாகும். சுகாதார துறையில் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...