உத்தரகாண்ட் கேதர்நாத் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நடந்தது. இறுதிகட்ட வாக்கு பதிவு நாளை நடக்கிறது. இதையடுத்து வரும் 23ம் தேதி தேர்தல் வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாரம்பரிய உடை அணிந்த நிலையில், கேதர்நாத் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
மோடியின் வருகையை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. கேதர் நாத் கோயிலைத் தொடர்ந்து பத்ரி நாத் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்துள்ளார்.
அதன் பின்னர் குகைக் கோயிலுக்குச் சென்று சுவாமிதரிசனம் செய்த பிரதமர் மோடி அங்கிருந்த குகையில் அமர்ந்து தியானம்செய்தார்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |