குளிர்காலத்தில் உத்திரகண்ட் மாநிலத்திற்கு வாருங்கள் – பிரதமர் மோடி அழைப்பு

குளிர்காலத்தில் உத்தரகண்ட் மாநிலத்திற்கு வந்தால் உண்மையான சூழலை அனுபவிக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தரகண்ட் மாநிலம் ஹர்சிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:

சில நாட்களுக்கு முன்பு மானா கிராமத்தில் நடந்த பனிச்சரிவு சம்பவத்திற்கு முதலில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

குளிர்காலத்தில் உத்தரகண்ட் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள். உத்தரகண்ட் மாநிலத்தை மிகவும் சிறந்த சுற்றுலா இடமாக மாற்ற நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எல்லைப் பகுதிகள் சுற்றுலாவின் பலன்களைப் மக்கள் பெற விரும்புகிறோம். உத்தரகண்ட் அரசின் தொலைநோக்குப் பார்வை மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். குளிர்காலத்தில் உத்தரகண்ட் மாநிலத்திற்கு வந்தால் உண்மையான சூழலை அனுபவிக்க முடியும். உத்தரகண்ட் மாநிலத்தில் குளிர்காலம் இல்லாத நேரத்தில் கூட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுற்றுலாத்துறை பன்முகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வழிபாடு
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அவர் கோவிலில் கூடியிருந்த மக்களை பார்த்து கை அசைத்தார். முன்னதாக, விமான நிலையத்தில் பிரதமர் மோடியை உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...