பாஜகவில் ஐக்கியமான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா!

ஜார்க்கண்டில் மாநிலக் கட்சியாக விளங்கிவந்த ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா இன்று பாஜக.,வுடன் ஐக்கியமானது.

2000ம் ஆண்டில் புதிதாக உதயமான ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் முதலமைச் சரானவர் பாஜகவைச் சேர்ந்த பாபுலால்மாரண்டி. 4 முறை எம்.பியாகவும், வாஜ்பாய் அரசாங்கத்தில் மத்திய இணையமைச்சராகவும் இருந்த மாரண்டி மாநில பாஜக தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா கட்சியை 2006ல் உருவாக்கினார்.

2009 சட்டமன்றதேர்தலில் 11 தொகுதிகளையும், 2014ல் 8 தொகுதியிலும், கடந்த ஆண்டில் 3 தொகுதிகளிலும் பாபுலால் மாரண்டியின் வந்த ஜார்க்கண்ட் விகாஸ்மோர்சா வென்றிருந்தது.

கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மற்றொரு மாநில கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்சாயானது, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில் பாஜக தலைமையுடன் ஏற்பட்டபிணைப்பின் காரணமாக தன்னுடைய கட்சியை மீண்டும் பாஜகவில் ஐக்கியமாக்கி யுள்ளார் பாபுலால் மாரண்டி.

ராஞ்சியில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்துகொண்டு பாபுலால் மாரண்டியை வரவேற்றனர்.

ராஞ்சியில் உள்ள ஜகன்னாத்புர் மைதானத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் ஆயிரக் கணக்கான ஜார்கண்ட் விகாஸ் மோர்சா கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சாவின் இணைப்புகாரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக பலம் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

One response to “பாஜகவில் ஐக்கியமான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா!”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...