பாஜகவில் ஐக்கியமான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா!

ஜார்க்கண்டில் மாநிலக் கட்சியாக விளங்கிவந்த ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா இன்று பாஜக.,வுடன் ஐக்கியமானது.

2000ம் ஆண்டில் புதிதாக உதயமான ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் முதலமைச் சரானவர் பாஜகவைச் சேர்ந்த பாபுலால்மாரண்டி. 4 முறை எம்.பியாகவும், வாஜ்பாய் அரசாங்கத்தில் மத்திய இணையமைச்சராகவும் இருந்த மாரண்டி மாநில பாஜக தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா கட்சியை 2006ல் உருவாக்கினார்.

2009 சட்டமன்றதேர்தலில் 11 தொகுதிகளையும், 2014ல் 8 தொகுதியிலும், கடந்த ஆண்டில் 3 தொகுதிகளிலும் பாபுலால் மாரண்டியின் வந்த ஜார்க்கண்ட் விகாஸ்மோர்சா வென்றிருந்தது.

கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மற்றொரு மாநில கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்சாயானது, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில் பாஜக தலைமையுடன் ஏற்பட்டபிணைப்பின் காரணமாக தன்னுடைய கட்சியை மீண்டும் பாஜகவில் ஐக்கியமாக்கி யுள்ளார் பாபுலால் மாரண்டி.

ராஞ்சியில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்துகொண்டு பாபுலால் மாரண்டியை வரவேற்றனர்.

ராஞ்சியில் உள்ள ஜகன்னாத்புர் மைதானத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் ஆயிரக் கணக்கான ஜார்கண்ட் விகாஸ் மோர்சா கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சாவின் இணைப்புகாரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக பலம் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

One response to “பாஜகவில் ஐக்கியமான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா!”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...