ஜார்க்கண்டில் மாநிலக் கட்சியாக விளங்கிவந்த ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா இன்று பாஜக.,வுடன் ஐக்கியமானது.
2000ம் ஆண்டில் புதிதாக உதயமான ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் முதலமைச் சரானவர் பாஜகவைச் சேர்ந்த பாபுலால்மாரண்டி. 4 முறை எம்.பியாகவும், வாஜ்பாய் அரசாங்கத்தில் மத்திய இணையமைச்சராகவும் இருந்த மாரண்டி மாநில பாஜக தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா கட்சியை 2006ல் உருவாக்கினார்.
2009 சட்டமன்றதேர்தலில் 11 தொகுதிகளையும், 2014ல் 8 தொகுதியிலும், கடந்த ஆண்டில் 3 தொகுதிகளிலும் பாபுலால் மாரண்டியின் வந்த ஜார்க்கண்ட் விகாஸ்மோர்சா வென்றிருந்தது.
கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மற்றொரு மாநில கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்சாயானது, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில் பாஜக தலைமையுடன் ஏற்பட்டபிணைப்பின் காரணமாக தன்னுடைய கட்சியை மீண்டும் பாஜகவில் ஐக்கியமாக்கி யுள்ளார் பாபுலால் மாரண்டி.
ராஞ்சியில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்துகொண்டு பாபுலால் மாரண்டியை வரவேற்றனர்.
ராஞ்சியில் உள்ள ஜகன்னாத்புர் மைதானத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் ஆயிரக் கணக்கான ஜார்கண்ட் விகாஸ் மோர்சா கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சாவின் இணைப்புகாரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக பலம் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
1proceed