இது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்துள்ளார் குடியரசு தலைவர். ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷணன் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

மஹாராஷ்ட்டிரா கவர்னராக இருந்த பகத்சிங் கோஷியாரி மற்றும் லடாக் கவர்னர் ராதாகிருஷ்ணன் மாத்தூர் ஆகியோர் தங்களை பொறுப்பில்இருந்து விடுவிக்குமாறு பிரதமரிடம் கோரியிருந்தனர். இதனையடுத்து மஹாராஷ்ட்டிரா மாநில கவர்னராக ரமேஷ் பையஸ் நியமிக்கப் பட்டுள்ளார். இதேநேரத்தில் தமிழக்தின் திருப்பூரை சேர்ந்தவரும், கோவை முன்னாள் எம்பியுமான சிபி.ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று மொத்தம் 13 மாநில கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதன்படி விவரம்வருமாறு:

ரமேஷ் பையாஸ் – மஹாராஷ்ட்டிரா
திரி விக்ரம் பர்நாயக் – அருணாசல பிரதேசம்
ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல்நசீர் – ஆந்திரா
லட்சுமணன் பிரசாத் – சிக்கிம்
ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் – பீஹார்
ஷிவ்பிரதாப் சுக்லா – ஹிமாச்சல்பிரதேசம்
குலாப்சந்த் கட்டாரியா – அசாம்
பிஸ்வாபூஷண் ஹரிச்சந்தன் – சத்தீஸ்கர்
பகுசவுகான் – மேகாலயா
சுஷ்ரிஅணுசுயா உய்க்கி – மணிப்பூர்
பிரிகேடியர் மிஸ்ரா- லடாக்

சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் கவர்னராகிறார்.

மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசன் நாகலாந்து மாநில கவர்னராக மாற்றப்பட்டுள்ளார்.

சி.பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இதனை எனக்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கவில்லை. இது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மக்களின் உயர்வுக்கும் முன்னேற்றத்திற்கும் என்னென்ன வழிகளில் செய்லபட முடியுமோ அதை மனதில் வைத்து பணியாற்றுவேன்.

பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதிக்கும் தமிழ் மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...