இது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்துள்ளார் குடியரசு தலைவர். ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷணன் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

மஹாராஷ்ட்டிரா கவர்னராக இருந்த பகத்சிங் கோஷியாரி மற்றும் லடாக் கவர்னர் ராதாகிருஷ்ணன் மாத்தூர் ஆகியோர் தங்களை பொறுப்பில்இருந்து விடுவிக்குமாறு பிரதமரிடம் கோரியிருந்தனர். இதனையடுத்து மஹாராஷ்ட்டிரா மாநில கவர்னராக ரமேஷ் பையஸ் நியமிக்கப் பட்டுள்ளார். இதேநேரத்தில் தமிழக்தின் திருப்பூரை சேர்ந்தவரும், கோவை முன்னாள் எம்பியுமான சிபி.ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று மொத்தம் 13 மாநில கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதன்படி விவரம்வருமாறு:

ரமேஷ் பையாஸ் – மஹாராஷ்ட்டிரா
திரி விக்ரம் பர்நாயக் – அருணாசல பிரதேசம்
ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல்நசீர் – ஆந்திரா
லட்சுமணன் பிரசாத் – சிக்கிம்
ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் – பீஹார்
ஷிவ்பிரதாப் சுக்லா – ஹிமாச்சல்பிரதேசம்
குலாப்சந்த் கட்டாரியா – அசாம்
பிஸ்வாபூஷண் ஹரிச்சந்தன் – சத்தீஸ்கர்
பகுசவுகான் – மேகாலயா
சுஷ்ரிஅணுசுயா உய்க்கி – மணிப்பூர்
பிரிகேடியர் மிஸ்ரா- லடாக்

சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் கவர்னராகிறார்.

மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசன் நாகலாந்து மாநில கவர்னராக மாற்றப்பட்டுள்ளார்.

சி.பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இதனை எனக்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கவில்லை. இது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மக்களின் உயர்வுக்கும் முன்னேற்றத்திற்கும் என்னென்ன வழிகளில் செய்லபட முடியுமோ அதை மனதில் வைத்து பணியாற்றுவேன்.

பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதிக்கும் தமிழ் மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...