விடியோவை எடிட்செய்து பிரதமர் பெயரை டேமேஜ் செய்ய முயலும் எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்றத்தில் நடந்த பிரிவுஉபசார விழாவில், முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, பதில் வணக்கம் செலுத்தாமல் பிரதமர் மோடி புறக்கணித்தது போன்ற விடியோக்களை ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சித் தலைவர்கள் டிவிட்டரில்பரப்பினர்.

அந்தக் காட்சிகள் எடிட் செய்யப்பட்டவை என்று அப்பதிவுகளுக்கு டிவிட்டர் சிவப்புக்கொடியிட்டு பிளாக் செய்துள்ளது.

ஆம் ஆத்மியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் மற்றும் சில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இதுபோன்ற எடிட்செய்த விடியோவை வெளியிட்டிருந்தனர்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது. புதிய குடியரசுத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முா்மு திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், ராம்நாத் கோவிந்துக்கு தில்லி நாடாளுமன்ற மையமண்டபத்தில் பிரிவு உபசார விழா சனிக் கிழமை நடத்தப்பட்டது.

அதில், குடியரசு துணைத்தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அப்போது, நாடாளுமன்றத்தில் இருந்த அனைத்துத் தலைவர்களுக்கும் ராம்நாத்கோவிந்த் வணக்கம் சொல்லிக்கொண்டே வந்தார். பிரதமர் நரேந்திரமோடியின் அருகே ராம்நாத் கோவிந்த் வரும் போது அவர் பிரதமர் மோடியைப் பார்த்து வணக்கம்சொல்வது போன்றும், ஆனால், பிரதமர் மோடியோ ராம்நாத் கோவிந்தைப் பார்த்து பதில் வணக்கம் சொல்லாமல், அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களை பார்த்து கொண்டிருந்ததுபோன்ற விடியோவை வெளியிட்டனர். ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி அவமதித்தது போன்றும் பதிவிட்டிருந்தனர்.

“எப்படி ஒருஅவமானம், மன்னிக்கவும் சார், இவர்கள்இப்படித்தான், உங்கள் பதவிக் காலம் முடிந்துவிட்டது, இனி உங்களை அவர்கள் பார்க்கக் கூட மாட்டார்கள்” எனறு ஹிந்தியில் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் இதற்கு பாஜக உண்மையான விடியோவைப் பகிர்ந்து, பிரதமர்மோடி ராம்நாத் கோவிந்தை அவமதிக்கவில்லை என்பதை உறுதி செய்திருக்கிறது.

அதுதொடர்பான விடியோவில், ராம்நாத்கோவிந்த் வணக்கம் செலுத்தும் போது பிரதமர் மோடி பதில்வணக்கம் செலுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதும், குடியரசுத் தலைவர் டிவிட்டர் பக்கத்தில் மோடி வணக்கம் செலுத்தும் புகைப் படம் இடம்பெற்றிருப்பதும், ராம்நாத் கோவிந்துக்கு மோடி பதில்வணக்கம் செலுத்திய பிறகு அவரை கடக்கும் போது எடுத்த விடியோவை எடிட்செய்து எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் பகிர்ந்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

இந்தவிடியோக்கள் தவறானவை என்று டிவிட்டர் நிர்வாகமும் சிவப்புக் கொடியிட்டு தவறான தகவல் என்று குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...