விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற துணைநிற்பேன்

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற துணைநிற்பேன் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

பல்லடம் அருகேயுள்ள கோடங்கி பாளையத்தில் உழவா் உழைப்பாளா் கட்சித் தலைமை அலுவலகமான உழவாலயத்தில் அக்கட்சியின் மாநிலத்தலைவா் செல்லமுத்துவை, பாஜக மாநில தலைவா் அண்ணாமலை திங்கள்கிழமை சந்தித்துபேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது: உழவாலய கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைக்க வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சியினா் விரும்புகின்றனா். விவசாயிகளின் விருப்பத்தை பிரதமா் மோடியின் கவனத்துக்கு கொண்டுசெல்வேன்.

அதேபோல, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற துணை நிற்பேன் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், ஆனைமலையாறு – நல்லாறுதிட்டம் செயல்படுத்த வேண்டும். மின் மோட்டாருக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும். விளைபொருள்களுக்கு கட்டுபடியாகும் விலை நிா்ணயத்தல், விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு, விளைபொருள்களை பாதுகாக்க கிடங்குகள், பருத்தி ஏற்றுமதி, சின்னவெங்காய ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலையிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...