தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
ஆங்கில செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்தியிருந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி,
மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை போலி என் கவுன்ட்டர் வழக்கில் சிக்கவைக்க சிபிஐ மூலம் எனக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இதையெல்லாம் ஒருபோதும் பா.ஜ., பெரிது படுத்தவில்லை. மத்திய அமைப்புகளை பா.ஜ. “தவறாக பயன்படுத்துகிறது” என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியல்ல.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
ராகுல் தகுதி நீக்கம் குறித்து கேட்டதற்கு , ராகுல் தகுதி நீக்கவிவகாரத்தில் பா.ஜ. பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 2013-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை பொதுவில் வைத்து அகந்தையுடன் ராகுல் கிழித்து எறிந்தார்.
வரப்போகும் 2024 லோக் சபா தேர்தலில் மீண்டும் பெரும்பான்மை பெறுவோம். நரேந்திரமோடி மீண்டும் பிரதமராவார் என்றார்.
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |