மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் மீது நடவடிக்கை – கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை

 பா.ஜ., எம்.பி.,யை தள்ளிவிட்டதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது, காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் ஏற்பட்ட மோதலில் பா.ஜ.,வை சேர்ந்த ஒடிசா எம்.பி., சாரங்கி மண்டை உடைந்தது. இன்னொரு பா.ஜ., எம்.பி., முகேஷ் ராஜ்புத் என்பவரும் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு டில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கிரண் ரிஜிஜூ அளித்த பேட்டி: ராகுல் தாக்கியதில் பா.ஜ., எம்.பி முகேஷ் ராஜ்புத் காயம் அடைந்து இருக்கிறார். எம்.பி.,க்கு சிறிது ரத்தம் கசிந்துள்ளது. தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ., எம்.பி.,யை தள்ளிவிட்டதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ராகுல் தனது வலிமையை காட்ட, பா.ஜ., எம்.பி.,க்களை தாக்கியது சரியல்ல. காங்கிரஸ் எம்.பி., ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் ராகுலிடம் கூற விரும்புகிறேன். வன்முறையில் ஈடுபட, ராகுலுக்கு அதிகாரம் வழங்கியது யார்? எம்.பி.க்கள் மீது ராகுலின் உடல்ரீதியான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

இது ராகுலின் கோபம், விரக்தியை காட்டுகிறது. ராகுலுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. இதற்கு தக்க நடவடிக்கை எடுப்போம் என்று ராகுலிடம் கூற விரும்புகிறேன். நாங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைப்பதால் மட்டும், உடல் ரீதியாக பழிவாங்கவில்லை. நாங்கள் எங்கள் உடல் வலிமையை மற்ற எம்.பி.க்களுக்கு எதிராக பயன்படுத்த மாட்டோம். ஏனென்றால் நாங்கள் அதை நம்பவில்லை. நாங்கள் அகிம்சையை நம்புகிறோம். நாங்கள் அகிம்சையில் நம்பிக்கை வைப்பதாலும், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைப்பதாலும் வன்முறையில் ஈடுபடுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ராகுல் மீது போலீசில் புகார் அளிக்க பா.ஜ., கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...